search icon
என் மலர்tooltip icon

    காமன்வெல்த்-2022

    • 92 கிலோ குத்துச் சண்டை போட்டி இறுதிபோட்டிக்கு இந்திய வீரர் சாகர் தகுதி,
    • மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா வெண்கலம் வென்றார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதேபோல் ஆண்களுக்கான 92 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சாகர், நைஜீரியாவின் இஃபியானிவை எதிர் கொண்டார். இப்போட்டியில் சாகர் 5-0 என்ற கணக்கில் வெற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.  


    ஆண்களுக்கான 97 கிலோ மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா பாகிஸ்தானின் தயாப் ரசாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 10-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீரரை வீழ்த்திய தீபக் நெஹ்ரா வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    • இறுதிச் சுற்றில் நைஜீரிய வீராங்கனை தோல்வி.
    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 13 தங்கம் வென்றுள்ளது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    இதில் பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பவினா படேல், நைஜீரிய வீராங்கனை இஃபேச்சுக்வுடே இக்பியோ வை எதிர் கொண்டார். இப்போட்டியில் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பவினா படேல் தங்கப்பதக்கம் வென்றார். 


    இதே பிரிவில் இந்திய வீராங்கனை சோனல்பென் படேல், இங்கிலாந்தின் சூ பெய்லியை 3-5 என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இது எனது முதல் பதக்கம் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் இந்தப் பதக்கத்தை எனது கணவர், குடும்பத்தினர், பயிற்சியாளர் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றும் சோனல்பென் படேல் தெரிவித்துள்ளார். இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை 13 தங்கம் வென்றுள்ளது.

    • அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3 கோல்கள் அடித்தது.
    • தென் ஆப்பிரிக்க அணி 2 கோல்கள் போட்டது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான ஆக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை எதிர் கொண்டது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங், அபிஷேக் மற்றும் ஜுக்ராஜ் சிங் ஆகியோரின் கோல்கள் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.  

    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 12 தங்கம் வென்றுள்ளது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 74  கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நவீன், பாகிஸ்தானின் முகமது ஷெரீப் தாஹிரை எதிர்கொண்டார். இதில் 9-0 என்ற கணக்கில் முகமது ஷெரீப் தாஹிரை வீழ்த்திய நவீன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 6-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா, வினேஷ் போகட் மற்றும் ரவி குமார் தஹியா ஆகியோர் மல்யுத்தத்தில் ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். காமல்வெல்த் போட்டியில் இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    • காமன்வெல்த் விளையாட்டில் ஹாட்ரிக் தங்கம் வென்றுள்ளார் வினேஷ் போகத்
    • லான் பவுல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். இன்று லான் பவுல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. முன்னதாக, பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார். 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் கிடைத்தது. 57 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதேபோல் 53 கிலோ எடைப்பிரிவு பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

    • வடக்கு அயர்லாந்து அணி 18-5 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
    • இந்திய அணியில் சுனில் பகதூர், நவ்னீத் சிங், சந்தன் குமார் சிங், தினேஷ் குமார் இடம்பெற்றிருந்தனர்.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று லான் பவுல் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா, வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் இடம்பெற்றனர். இதில் வடக்கு அயர்லாந்து அணி 18-5 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    இந்திய அணியில் சுனில் பகதூர், நவ்னீத் சிங், சந்தன் குமார் சிங், தினேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    • 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் பந்தய துரத்தை 8.11 நிமிடங்களில் கடந்தார்.

    பிரிட்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இன்று பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பந்தய துரத்தை 8 நிமிடம் 11.20 வினாடிகளில் கடந்தார். இது அவரது தனிப்பட்ட சாதனை மற்றும் தேசிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • இறுதிச்சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை பாவனா 8வது இடத்தைப் பிடித்தார்.

    பிரிட்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இன்று மேலும் ஒரு பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவர் பந்தய தூரத்தை 43 நிமிடம் 38.83 வினாடிகளில் கடந்தார். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்.

    இப்போட்டியில் ஆஸ்ரேலியாவின் ஜெமிமா (42:34.30) தங்கப்பதக்கமும், கென்ய வீராங்கனை எமிலி (43:50.86) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    இப்போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை பாவனா (47:14.13) 8வது இடத்தைப் பிடித்தார்.

    காமன்வெல்த் வேகநடை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஹர்மிந்தர் சிங் ஆவார். இவர் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில், 20 கிமீ வேகநடை போட்டியில் வெண்கலம் வென்றார்.

    • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்கள் வென்றுள்ளனர்.
    • மல்யுத்தத்தில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றதை மோஹித் கிரேவால் உறுதி செய்தார்.

    பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக மல்யுத்த வீரர் மோஹித் கிரேவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்றதன் மூலம், மல்யுத்தத்தில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றதை மோஹித் கிரேவால் உறுதி செய்தார்.

    இந்நிலையில் வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நம் மல்யுத்த வீரர்களால் வெளிப்படுத்தப்பட்ட நம்பமுடியாத வடிவம். பதக்கப் பட்டியலில் மோஹித் கிரேவால் இணைந்துள்ளார். அவர் ஒரு வெண்கலப் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வரும்போது அவரது கூர்மையான கவனம் தனித்து நிற்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். வரும் காலங்களில் அவர் வெற்றியின் புதிய உயரங்களை எட்டுவார் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து இருந்தன.
    • பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா ஒரு கோல் அடித்தது.

    இண்டாவது பாதி ஆட்டத்தின்போது இந்திய மகளிர் அணி பதில் கோல் அடித்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் இருந்தன. வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

    இதில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது. இந்திய அணி அடுத்ததாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கிறது.

    • மல்யுத்த போட்டிகளில் சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா தங்கம் வென்றனர்.
    • இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 3 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார்.

    இதேபோல் 23வது வயதான இந்திய வீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா வென்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

    காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலம் வென்றார். 


    மல்யுத்த போட்டியில் 68 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்


    முன்னாக இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • ஆண்கள் மல்யுத்த பிரிவில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார்.
    • காமல்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்க பதக்கம் வென்றுள்ளது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று நடை பெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.   

    கனடா வீராங்கனை அனா கொடினஸ் கோன்சலசை வீழ்த்திய அவர், நடப்பாண்டிற்கான காமல்வெல்த் போட்டியில் முதல் தங்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

    இந்தியாவின் தங்கப் பதக்கம் 8 ஆக உயர்ந்துள்ளது. முன்னாக இன்று இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

    ×