என் மலர்tooltip icon

    காமன்வெல்த்-2022

    • மல்யுத்த போட்டிகளில் சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா தங்கம் வென்றனர்.
    • இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 3 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார்.

    இதேபோல் 23வது வயதான இந்திய வீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா வென்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

    காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலம் வென்றார். 


    மல்யுத்த போட்டியில் 68 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்


    முன்னாக இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • ஆண்கள் மல்யுத்த பிரிவில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார்.
    • காமல்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்க பதக்கம் வென்றுள்ளது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று நடை பெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.   

    கனடா வீராங்கனை அனா கொடினஸ் கோன்சலசை வீழ்த்திய அவர், நடப்பாண்டிற்கான காமல்வெல்த் போட்டியில் முதல் தங்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

    இந்தியாவின் தங்கப் பதக்கம் 8 ஆக உயர்ந்துள்ளது. முன்னாக இன்று இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.
    • அன்ஷு மாலிக் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பிரிட்டன்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.நேற்று வரை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றிருந்தது.

    இந்நிலையில், இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று 21வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.  

    • இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .

    இறுதிபோட்டிக்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் கான்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    • காமன்வெல்த் மகளிர் டி20 போட்டியின் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
    • முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதுகின்றன.

    காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி யில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தியது.

    இதையடுத்து அரை இறுதியில் யார்-யாருடன் மோதுவது என்பது உறுதியானது. முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதுகின்றன. 2-வது அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு ஆட்டங்களும் நாளை நடக்கிறது.

    • வேல்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
    • இந்தியா இதுவரை 6 தங்கம் உள்பட 20 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

    இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில், நேற்று நடந்த கடைசி குரூப் ஆட்டத்தில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்திய வீரர்களின் வேகத்துக்கு வேல்ஸ் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    அரையிறுதியில் இந்தியா பலம்வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

    • இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது.
    • பாரா பளு தூக்குதலில் இந்தியாவின் சுதிர் தங்கப் பதக்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. இதில் இந்தியா இதுவரை 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது.

    7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வ-து தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர். 134.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனை ஆகும்.

    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    • இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
    • நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. இதில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

    7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
    • குத்துச்சண்டையில் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

    இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

    7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு. இதன் மூலம் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    • உயரம் தாண்டுதலில் தேஜஸ்வி சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வி சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 162 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பார்படோஸ் 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெறும் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் பார்படோஸ் அணியுடன் மோதியது. 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் 56 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 34 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றிஎன்ற இலக்குடன் பார்படோஸ் அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்து வீசி விக்கெட்களை கைப்பற்றினர். இறுதியில் பார்படோஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    இந்தியா சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் 3 போட்டியில் இந்தியா 2 வெற்றி பெற்றுள்ளது.

    • பளு தூக்குதல் பிரிவில் குர்தீப் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்
    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

    109 கிலோ எடைப்பிரிவினருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங், மொத்தம் 390 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    ×