என் மலர்
இது புதுசு
பஜாஜ் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெங்களூரை சேர்ந்த யுலு எனும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரூ. 60 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. அந்த வகையில் இந்நிறுவனம் தற்தமயம் குறைந்த செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை யுலு பிராண்டிங்கில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் ரூ. 40 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. யுலு பிராண்டு ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குவதற்கு ரூ. 44 ஆயிரம் வரை செலவிடுகிறது. யுலு நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களை சீனாவில் உற்பத்தி செய்து அவற்றை இந்தியாவில் அசெம்பில் செய்கிறது.

இவ்வாறு செய்யும் போது ஸ்கூட்டர் விலை ரூ. 35 ஆயிரத்தில் துவங்கி ரூ. 37 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் பஜாஜ் மாடல்களை விட சிறப்பான ஒன்றாக இருக்க வேண்டும் என யுலு விரும்புவதாக தெரிவித்து இருக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பஜாஜ் ஆட்டோ உருவாக்கிய சுமார் 1 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள யுலு திட்டமிட்டுள்ளது. தற்சமயம் நாடு முழுக்க சுமார் ஐந்து நகரங்களில் 4000 ஸ்கூட்டர்களை விற்றிருக்கிறது. யுலு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 48 வோல்ட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
இவை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்.யு.வி. காரினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரின் துவக்க விலை ரூ. 33.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஐந்து பேர் அமரக்கூடிய டிகுவான் மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய மாடலாக டிகுவான் ஆல்ஸ்பேஸ் வெளியாகி இருக்கிறது. புதிய டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் வாகனமாக டிகுவான் ஆல்ஸ்பேஸ் இருக்கிறது. மேலும் புதிய ஏழு பேர் பயணிக்கக்கூடிய எஸ்.யு.வி. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய 2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 டி.எஸ்.ஐ. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 4 மோஷன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல்: ஹபனிரோ ஆரஞ்சு மெட்டாலிக், பியூர் வைட், ரூபி ரெட் மெட்டாலிக், பெட்ரோலியம் புளூ, பிளாட்டினம் கிரே மெட்டாலிக், பைரிட் சில்வர் மற்றும் டீப் பிளாக் பியல் என ஏழு நிறங்களில் கிடைக்கிறது. புதிய காருக்கான விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.
ஜெனிசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஜி80 கார் ஆன்லைனில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜெனிசிஸ் நிறுவனம் புத்தம் புதிய ஜி80 மாடலை ஆன்லைன் மூலம் அறிமுகம் செய்தது. புதிய ஜி80 மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். இது ஆத்லெடிக் எலிகன்ஸ் வடிவமைப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இதிலுள்ள கிரெஸ்ட் கிரில், குவாட்லேம்ப்களிடையே செல்லும் இரண்டு கோடுகள் கார் முழுக்க நீண்டு இருப்பது ஜெனிசிஸ் பாரம்பரயத்தை பிரதிபலிக்கிறது.

புதிய ஜி80 தோற்றத்தில் அழகாகவும், அதிநவீன அம்சங்கள் நிறைந்து இருக்கிறது. காரின் பின்புறம் குவாட்லேம்ப்கள் மற்றும் ஹார்ஸ்ஷூ வடிவமைப்பு டெக்லிட் காணப்படுகிறது. இதன் டிரன்க் ரிலீஸ் பட்டன் மற்றும் சரவுன்டிங் குரோம் கார்னிஷ் ஜெனிசிஸ் லோகோவை பிரதிபலிக்கிறது.
காரின் உள்புறம் டேஷ்போர்டில் 14.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள மெல்லிய ஏ.சி. வென்ட்கள் கேபின் வழியே நீள்கிறது. புசிய ஜி80 மாடல் இம்மாதமே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய வடிவமைப்பு, பவர்டிரெயின்கள் மற்றும் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் பி.எஸ்.6 ரக போலோ மற்றும் வென்டோ மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் பி.எஸ்.6 ரக போலோ மற்றும் வென்டோ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ பி.எஸ்.6 மாடல்களின் துவக்க விலை ரூ. 5.82 லட்சம் மற்றும் ரூ. 8.82 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய போலோ மற்றும் வென்டோ மாடல்கள் தற்சமயம் பி.எஸ்.6 ரக 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது அதிக மைலேஜ் மற்றும் சீரான செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டி.எஸ்.ஐ மற்றும் எம்.பி.ஐ. தொழில்நுட்பத்தில் கிடைக்கிறது.

புதிய 1.0 லிட்டர் என்ஜின் முந்தைய 1.2 லிட்டர் யூனிட்டிற்கு மாற்றாக வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 175 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் உயர் ரக மாடல்களில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படலாம்.
புதிய 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் அதிக மைலேஜ், சிறப்பான செயல்திறன் வழங்கும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்து இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ மாடல்கள் டிரென்ட்லைன், கம்ஃபொர்ட்லைன், ஹைலைன் மற்றும் ஹைலைன் பிளஸ் உள்ளிட்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஜி.எல்.சி. கூப் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜி.எல்.சி. கூப் மாடல் காரினை அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் மாடல் துவக்க விலை ரூ. 62.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், விரைவில் விநியோகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மெர்சிடிஸ் நிறுவனத்த்ன் MBUX தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய 2020 ஜி.எல்.சி. கூப் மாடல்: 300டி 4 மேடிக் மற்றும் 300 4 மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் உயர் ரக டீசல் மாடலின் விலை ரூ. 63.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அசெம்பிள் செய்யப்படும் பத்தாவது மெர்சிடிஸ் மாடலாக புதிய கூப் மாடல் இருக்கும் என தெரிகிறது.

புதிய காரின் முன்புறம் மெர்சிடிஸ் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் டைமண்ட் பேட்டன் கிரில், இருபுறங்களிலும் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் மேம்பட்ட முன்புற பம்ப்பர் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்லோப்பிங் ரூஃப்லைன், புதிய அலாய் வீல்கள், பின்புறம் மேம்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், மோல்ட் செய்யப்பட்ட டிஃப்யூசர், புதிய எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டுள்ளன.
உள்புறம் 10.25 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இவைதவிர பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் மாடல் பி.எஸ். 6 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை கொண்டிருக்கிறது. இவற்றில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜி.எல்.சி. கூப் 300 4 மேடிக் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 258 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஜி.எல்.சி. கூப் 300டி 4 மேடிக் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 245 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் ஸ்டான்டர்டு 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புத்தம் புதிய 2020 இ கிளாஸ் மாடல் காருக்கான டீசரினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் மாடல் சர்வதேச சந்தையில் அதிக பிரபலமான கார் மாடலாக இருக்கிறது. 2021-ம் ஆண்டிற்கு மெர்சிடிஸ் நிறுவனம் புதிய இ கிளாஸ் மாடலினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் 2020 ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிக்கு வைக்கப்பட இருந்தது.
எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு சார்ந்த அச்சம் காரணமாக ஜெனிவா மோட்டார் விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் மெர்சிடிஸ் நிறுவனம் புதிய காரினை டிஜிட்டல் முறையில் உலக சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கென மெர்சிடிஸ் நிறுவனம் புதிய டீசர்களை வெளியிட்டுள்ளது.

டீசர்களில் புதிய காரின் முன்புறம் ட்வீக் செய்யப்பட்டு கூர்மையான எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், சற்றே மேம்பட்ட கிரில் வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது. இதே போன்று காரின் பின்புறமும் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய காரில் ஹைப்ரிட் என்ஜின் செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. காரின் உள்புறம் தற்போதைய இ கிளாஸ் மாடலில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். அந்த வகையில் ட்வின் ஸ்கிரீன் செட்டப், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2020 ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டூ பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்துள்ளது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 ரக 2020 ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டூ மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனம் ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளை பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் வெளியிட்டு இருந்தது. அந்த வரிசையில் தற்சமயம் புதிய ஜாவா மற்றும் ஃபார்டி டூ மோட்டார்சைக்கிள்களை பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து இருக்கிறது.

புதிய ஜாவா மற்றும் ஃபார்டி டூ மோட்டார்சைக்கிள்களில் 293 சிசி, சிங்கிள் சிலிண்டல், 4 ஸ்டிரோக், லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. கிராஸ் போர்ட் தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் மோட்டார்சைக்கிள் மாடலாக இது வெளியாகி இருக்கிறது.
இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாட் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். உடன் வழங்கப்படகிறது. இதன் பேஸ் வெர்ஷன் பின்புறம் டிரம் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். கொண்டிருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புத்தம் புதிய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வன் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
ஹோண்டா சி.ஆர்.எஃப்.1100எல் ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல் இந்தியாவில் மார்ச் 5-ம் தேதி வெளியாகும் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய சி.ஆர்.எஃப்.1100எல் ஆஃப்ரிக்கா ட்வின் மாடலில் தற்சமயம் 1,084 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 101 பி.ஹெச்.பி. பவர், 105 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய என்ஜின் அலுமினியம் சிலிண்டர் ஸ்லீவ், மேம்பட்ட கேசிங் கொண்டிருக்கிறது. இதனால் இதன் எடை 2.5 கிலோ வரை குறைந்துள்ளது.
மேலும் இதில் மெல்லிய ஃபிரேம் கொண்டிருக்கிறது. மோட்டார்சைக்கிளின் எடை குறைந்து இருப்பதால், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மோடில் இது லிட்டருக்கு 20.4 கிலோமீட்டர் மற்றும் 20.8 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

இந்த என்ஜின் நான்குவித செயல்திறன், மூன்றுவித எலெக்டிரானிக் என்ஜின் பிரேக்கிங் மற்றும் ஏழு நிலைகளில் ஹோண்டா செலக்டபில் டிராக்ஷன் கண்ட்ரோல் வழங்குகிறது. இத்துடன் ஹோண்டாவின் வீலி கண்ட்ரோல் தொழில்நுட்பம் மேம்பட்ட ஃபேரிங் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
மேலும் இதில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. இதில் ப்ளூடூத் மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதி வழங்கப்பட்டுள்ளது. 2020 ஆஃப்ரிக்கா ட்வின் மாடலில்- டூர், அர்பன், கிரேவல் மற்றும் ஆஃப்-ரோடு என நான்கு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மாடல் தற்சமயம் ரூ. 13.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2020 மாடல்களின் விலை ரூ. 14.50 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 16.50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஜெனிவா மோட்டார் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஜெனிவா மோட்டார் விழா 2020 கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூலம் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுவிட்சர்லாந்து அரசாங்கம், பொது மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளதை தொடர்ந்து மோட்டார் விழா ரத்தாகி இருக்கிறது.

2020 ஜெனிவா மோட்டார் விழா மார்ச் 5-ம் தேதி துவங்கி மார்ச் 15-ம் தேதி வரை நடைபெற இருந்தது. 1000-க்கும் அதிகமானோர் கூடும் நிகழ்வுகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிய தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், எதுவரை தடை விதிக்கப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
2020 ஜெனிவா மோட்டார் விழா ரத்து செய்யப்பட்டுவதாக விழா ஏற்பாட்டு குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பல்வேறு வர்த்தக நிகழ்வுகள் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்குகள் கொரோனா வைரஸ் பாதிப்பு அபாயம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கே.டி.எம். நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஐரோப்பியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கே.டி.எம். தனது பெரும்பாலான வாகனங்களை இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறது. கே.டி.எம். ஸ்போர்ட் கார் ஜி.எம்.பி.ஹெச். கொண்டு அந்நிறுவனம் ஸ்போர்ட் கார்கள் பிரிவில் களமிறங்குகிறது.
கே.டி.எம். நிறுவனம் 12 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்த கே.டி.எம். எக்ஸ் போ மற்றும் அதன் பின் வெளியான மாடல்கள் உலகம் முழுக்க விற்பனை செய்யப்பட்டன. அந்த வரிசையில் கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். மாடலை உருவாக்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
புதிய கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். மாடலினை சுமார் 1000 கிலோ எடையில் அதிகபட்சம் 600 ஹெச்.பி. திறன் வழங்கும் வகையில் உருவாக்கி இருக்கிறது. இதற்கு ஆடியின் 2.5 லிட்டர், 5 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. ஜி.டி.2 ரேசராக களமிறங்கும் கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். இரண்டு கிலோ எடைக்கு ஒரு ஹெச்.பி. திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்படுகிறது.

முதல் 20 கார்கள் இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இந்த கார் எஸ்.ஆர்.ஒ. எனும் சுய ஒழுங்குமுறை வாரியத்தால் உறுதி செயப்பட்டு, பின் ஜி.டி.2 ரேசிங் சீரிசில் களமிங்க முடியும். அந்த வகையில் ஆடி மற்றும் போர்ஷ் நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது நிறுவனமாக இதுபோன்ற ரேசிங் காரை உருவாக்கிய பெருமையை கே.டி.எம். பெறுகிறது.
இதுதவிர புதிய 500 ஹெச்.பி. வரையிலான செயல்திறன் வழங்கும் என்பதால், கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். ஜி.டி. விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கும் ரேசிங் சீரிஸ்களிலும் பங்கேற்க முடியும்.
லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் புதிய 2020 டிஃபென்டர் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
லேணட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் புதிய 2020 டிஃபென்டர் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க மாடல் விலை ரூ. 69.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் 90 ( 3 கதவுகள்) மற்றும் 110 (5 கதவுகள்) வேரியண்ட்களில் கிடைக்கும்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் புதிய டிஃபெனடர் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. இவற்றின் விநியோகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
புதிய டிஃபென்டர் மாடல் எஸ், எஸ்.இ., ஹெச்.எஸ்.இ. மற்றும் டாப் எண்ட் ஃபர்ஸ்ட் எடிஷன் உள்ளிட்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட் மற்றும் மாடல்களில் அதிகளவு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய காரினை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்ய முடியும்.

டிஃபென்டர் 90 மற்றும் 110 வேரியண்ட்களும் ஒற்றை என்ஜின் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. இது 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 292 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய 2020 டிஃபென்டர் மாடலில் உள்ள ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் ஆஃப் ரோடிங்கின் போது 145 எம்.எம். வரை உயரும் வசதி கொண்டிருக்கிறது. பின் சாதாரண சாலைகளில் பயணிக்கும் போது தானாக கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைந்துவிடும். ஆஃப் ரோடிங் வசதிகள் மட்டுமின்றி புதிய எஸ்.யு.வி மாடலில் பல்வேறு ஆடம்பர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
டொயோட்டா நிறுவனத்தின் வெல்ஃபயர் பிரீமியம் எம்.பி.வி. கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய பிரீமியம் எம்.பி.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் இந்தியாவில் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் மாடல் ஆகும். இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 79.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் பல்வேறு பிரீமியம் ஆடம்பர அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய வெல்ஃபயர் பிரீமியம் எம்.பி.வி. மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 115 பி.ஹெச்.பி. @4700 ஆர்.பி.எம்., 198 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் முன்புற ஆக்சிலில் 115 கிலோவாட் @4800 ஆர்.பி.எம். செயல்திறனும், பின்புறம் 50 கிலோவாட் @4608 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்துகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை டொயோட்டா வெல்ஃபயர் எம்.பி.வி.- ட்வின் சன்ரூஃப், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் கண்ட்ரோல் கொண்ட ஸ்லைடிங் கதவுகள், 13 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் வைபை கனெக்டிவிட்டி, ஆட்டோ எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஹீட்டெட் ORVMகள், 16 நிறங்களில் ரூஃப் ஆம்பியன்ட் லைட்டிங் கொண்டிருக்கிறது.
காரின் சென்ட்ரல் கன்சோலில் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 17 ஸ்பீக்கர் ஜெ.பி.எல். ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு புதிய டொயோட்டா மாடலில் 360 டிகிரி கேமரா, பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.






