என் மலர்
பைக்
- டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐகியூப் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
- டிவிஎஸ் ஐகியூப் ஒட்டுமொத்த விற்பனையில் 89 சதவீதம் 2023 நிதியாண்டில் நடைபெற்று இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக 15 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. 2023 பிப்ரவரி மாத வாக்கில் 15 ஆயிரத்து 522 யூனிட்களும், மார்ச் மாதத்தில் 15 ஆயிரத்து 364 யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன. இதன் மூலம் ஐகியூப் மாடல் ஒட்டுமொத்தமாக இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்திய சந்தையில் இதுவரை மொத்தத்தில் ஒரு லட்சத்து 08 ஆயிரத்து 550 ஐகியூப் யூனிட்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2020 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விற்பனையில் 89 சதவீதம் மார்ச் 2023 இறுதியிலேயே நடைபெற்று இருக்கிறது. முன்னதாக 2023 நிதியாண்டிலேயே ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்ட டிவிஎஸ் இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. எனினும், 3 ஆயிரத்து 346 யூனிட்கள் இடைவெளியில் இது தவறிவிட்டது.

கடந்த 12 மாதங்களாக டிவிஎஸ் ஐகியூப் மாடலுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரை 8 ஆயிரத்து 724 யூனிட்கள் விற்பனையான நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் 2022 வரை 15 ஆயிரத்து 645 யூனிட்களாக அதிகரித்து இருக்கிறது. பின் அக்டோபர் முதல் டிசம்பர் 2022-க்குள் 43 ஆயிரத்து 055 யூனிட்களாக உயர்ந்தது.
ஐகியூப் மாடலின் விற்பனை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பட்டியலில் எதிரொலித்தது. 2023 நிதியாண்டில் மட்டும் ஐகியூப் மாடலை 80 ஆயிரத்து 565 பேர் வாங்கியுள்ளனர். இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் டாப் 20 உற்பத்தியாளர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை ரூ. 98 ஆயிரத்து 564 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 690 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 140 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் டாப் எண்ட் ஐகியூப் ST வேரியண்டை அறிமுகம் செய்தது. எனினும், இதன் விலை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
- நிதியாண்டின் கடைசி மாதத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.
- தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது மார்ச் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. 2023 மார்ச் மாதத்தில் மட்டும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் ஒலா எலெக்ட்ரிக் பங்குகள் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒரே மாதத்தில் இத்தனை யூனிட்கள் விற்பனை செய்திருப்பது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு முதல் முறை ஆகும். சமீபத்திய மாதாந்திர விற்பனை விவரங்களை வைத்து பார்க்கும் போது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக வாகனங்களை விற்பனை செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

தற்போதைய நிதியாண்டில் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஒலா எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது. 2022-23 நிதியாண்டின் கடைசி மாதத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. அதன்படி தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது.
ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்திருப்போர் பெரும்பாலும் ஒலா எக்ஸ்பீரியன்ஸ் செண்டரை சுற்றி 20 கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கின்றனர் என்று ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 2 முதல் 4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக்குகளால் வித்தியாசப்படும் ஆறு மாடல்களை ஒலா எலெக்ட்ரிக் விற்பனை செய்து வருகிறது.
- ஹோண்டா நிறுவனத்தின் 2023 SP125 மோட்டார்சைக்கிள் இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- முற்றிலும் புதிய நிறத்தில் கிடைக்கும் 2023 ஹோண்டா SP125 OBD2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் OBD2 விதிகளுக்கு பொருந்தும் SP125 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய 2023 ஹோண்டா SP125 மாடலின் விலை ரூ. 85 ஆயிரத்து 131 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2023 மாடல் புதிய விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ததோடு, புதிய நிறத்திலும் கிடைக்கிறது.
2023 ஹோண்டா SP125 மாடலில் ஆன்போர்டு பரிசோதனை சிஸ்டம் உள்ளது. இது மோட்டார்சைக்கிள் வெளிப்படுத்தும் காற்று மாசு விவரங்களை ரியல்டைமில் காண்பிக்கும். இத்துடன் 2023 ஹோண்டா SP125 மாடல் புதிதாக மேட் மார்வல் புளூ மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் SP125 மாடல் தற்போது- பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், பியல் சைரென் புளூ மற்றும் புதிய மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே சிங்கில் பாட் ஹெட்லைட், பாடி நிறத்தால் ஆன ஹெட்லைட் கவுல், முன்புற ஃபெண்டர், ஃபியூவல் டேன்க் ஷிரவுட்கள், பாடி நிறத்தால் ஆன பில்லியன் கிராப் ரெயில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், க்ரோம் ஹீட் ஷீல்டு கொண்டிருக்கிறது. இதன் ஸ்டைலிங் மோட்டார்சைக்கிளுக்கு அதிநவீன தோற்றத்தை வழங்கி இருக்கிறது.
2023 ஹோண்டா SP125 மாடலில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பிஸ்டன் கூலிங் ஜெட், எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், கம்பைன்டு பிரேகிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஃபியூவல் விரங்கள், இகோ இண்டிகேட்டர் மற்றும் கியர் பொசிஷன் போன்ற விவரங்களை காண்பிக்கிறது.
முந்தைய போன்றே 2023 ஹோண்டா SP125 மாடலும் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டிரம் வேரியண்ட் விலை ரூ. 85 ஆயிரத்து 131 என்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 131 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஹோண்டா SP125 மோட்டார்சைக்கிள் டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் ஹீரோ கிளாமர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- சுசுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்கூட்டர் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- தோற்றத்தில் இ பர்க்மேன் மாடல் அதன் பெட்ரோல் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம்- பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடலை நீண்ட காலமாக சோதனை செய்து வருகிறது. தற்போது சுசுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இ பர்க்மேன் மாடல் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய இ பர்க்மேன் மாடல் தோற்றத்தில் அதன் பெட்ரோல் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
மேக்சி ஸ்டைல் பாடிவொர்க் கொண்ட முன்புறத்தில் பிரமாண்ட பக்கவாட்டு பேனல்கள் உள்ளன. ஹார்டுவேரை பொருத்தவரை முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், முன்புறம் டிஸ்க் பிரேக் செட்டப் உள்ளது. இந்த மாடலில் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி வழங்கப்படுவதால் டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்படலாம்.
சுசுகி இ பர்க்மேன் மாடலில் 4.0 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் கழற்றி மாற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இது 44 கிலோமீட்டர் ரேஞ்ச், மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய எலெக்ட்ரிக் வாகனத்திற்கென சார்ஜிங் மையங்களை அமைக்க ஹோண்டா நிறுவனம் கச்சோ உடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இ பர்க்மேன் மாடல் மொத்தத்தில் 147 கிலோ எடை கொண்டிருக்கும் என்றும் இதன் உயரம் 780mm வரை இருக்கும் என்றும் தெரிகிறது.
- ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் கர்நாடகாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.
- எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எலெக்ட்ரிக் மோட்டார்களை ஹோண்டா நிறுவனமே உருவாக்க இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றிய தகவல்களை தெரிவித்து இருக்கிறது. இதற்காக ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய இ பிளாட்ஃபார்மை அறிவித்துள்ளது. இது ஃபிக்சட் பேட்டரி, கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி மற்றும் மிட் ரேஞ்ச் பிரிவு என பல்வேறு விதமான எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது.
பிராஜக்ட் வித்யுட் எனும் திட்டத்தின் கீழ் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் முதல் வாகனமாக மிட் ரேஞ்ச் எலெக்ட்ரிக் மாடல் இருக்கும். இரண்டாவது மாடல் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி ஆப்ஷனை கொண்டிருக்கும். இது ஹோண்டா மொபைல் பவர் பேக் இ பயன்படுத்தும்.

புதிய வாகனங்களை அறிமுகம் செய்வதோடு, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் நாடு முழுக்க சார்ஜிங் உள்கட்டமைப்புகளை கட்டமைக்க இருக்கிறது. இதற்காக நாடு முழுக்க 6 ஆயிரத்திற்கும் அதிகமான நெட்வொர்க் டச்பாயிண்ட்களில் சார்ஜிங் மையங்களை இன்ஸ்டால் செய்ய இருக்கிறது.
இதுதவிர பேட்டரி மாற்றும் மையங்களை பெட்ரோல் நிலையங்கள், மெட்ரோ ஸ்டேஷன்கள் மற்றும் இதர பொது இடங்களில் கட்டமைக்க ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள நரசபுறா ஆலை முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உபகரணங்களான பேட்டரிகள் மற்றும் பிசியுக்களை பயன்படுத்தவுள்ளன. மேலும் இந்த வாகனங்களுக்கான மோட்டாரை ஹோண்டா நிறுவனமே உருவாக்க இருக்கிறது.
- ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2023 ஆக்டிவா மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- 2023 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஐந்து வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2023 ஆக்டிவா 125 மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஆக்டிவா 125 மாடல் OBD2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் H ஸ்மார்ட் வேரியண்டையும் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிய ஆக்டிவா ரேஞ்ச்- டிரம், டிரம் அலாய், டிஸ்க் மற்றும் H ஸ்மார்ட் என நான்கு வெர்ஷன்களில் கிடைக்கிறது.
125சிசி ஆக்டிவா மாடலில் சிங்கில் பாட் ஹெட்லைட், பாடி நிறத்தால் ஆன கௌல், அப்ரனில் மவுண்ட் செய்யப்பட்ட இண்டிகேட்டர்கள், பாடி நிறத்தால் ஆன முன்புற ஃபெண்டர், பாடி பேனல் மற்றும் அப்ரனில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய 2023 ஆக்டிவா மாடல்- பியல் நைட் ஸ்டார்ட் பிளாக், ஹெவி கிரே மெட்டாலிக், ரிபல் ரெட் மெட்டாலிக், பியல் பிரஷியஸ் வைட் மற்றும் மிட்நைட் புளூ மெட்டாலிக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ஆக்டிவா 125 மாடலில் ஹோண்டா நிறுவனம் OBD2 விதிகளுக்கு தேவையான மாற்றங்களை மேற்கொண்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 123.97சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.18 ஹெச்பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பொசிஷன் லேம்ப்கள், மேம்பட்ட ஸ்மார்ட் பவர் தொழில்நுட்பம், ஏசிஜி ஸ்டார்டர், ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு எஞ்சின் இன்ஹிபிட்டர் அம்சம், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஸ்கூட்டரின் முந்தைய வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விலை விவரங்கள்:
ஹோண்டா ஆக்டிவா டிரம் ரூ. 78 ஆயிரத்து 920
ஹோண்டா ஆக்டிவா டிரம் அலாய் ரூ. 82 ஆயிரத்து 588
ஹோண்டா ஆக்டிவா டிஸ்க் ரூ. 86 ஆயிரத்து 093
ஹோண்டா ஆக்டிவா H-ஸ்மார்ட் ரூ. 88 ஆயிரத்து 093
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- ஹோண்டா எலெக்ட்ரிக் வாகனங்களில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வெளியீடு பற்றிய அதிகராப்பூர்வ தகவல்களை மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி ஹோண்டா நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக ஆக்டிவா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது வரும் ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலின் பேட்டரியை கழற்றும் வசதி வழங்கப்படாது என்றே தெரிகிறது.

இதுதவிர K4BA எனும் குறியீட்டு பெயர் கொண்ட எலெக்ட்ரிக் மொபெட் ஒன்றை ஹோண்டா உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும், இது ஹோண்டா நிறுவனத்தின் கழற்றி மாற்றக்கூடிய சேவையை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சேவையை ஹோண்டா நிறுவனம் 2021 வாக்கில் துவங்கியது.
இதனை தற்போது எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக விளங்கும் ஹோண்டா எலெக்ட்ரிக் வாகன பிரிவில் சற்று தாமதமாகவே களமிறங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு துவங்கி இந்த பிரிவில் அதிக கவனம் செலுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இது பற்றிய முழு விவரங்கள் மார்ச் 29 ஆம் தேதி தெரியவரும்.
- ஹோண்டா நிறுவனத்தின் புதிய 300சிசி பைக் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
- புதிய ஹோண்டா 300சிசி மாடல் அட்வென்ச்சர் ஸ்டைலிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2021 வாக்கில் ஹோண்டா நிறுவனம் CB200X மாடலை அறிமுகம் செய்தது. இது ஹார்னெட் 2.0 நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட அட்வென்ச்சர் ஸ்டைல் மாடல் ஆகும்.
அட்வென்சசர் பைக் என்ற போதிலும், இதில் நீண்ட சஸ்பென்ஷன் அல்லது பெரிய முன்புற வீல் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை. இதோடு கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாகவே இருந்தது. புதிய மாடலில் இது போன்ற வழிகளை தவிர்த்து புதிய மாடலுக்கு ஏற்ற அப்டேட்களை ஹோண்டா நிறுவனம் வழங்கும் என தெரிகிறது.

புதிய அட்வென்ச்சர் மாடலில் ஹோண்டா நிறுவனம் 293சிசி, ஏர்-ஆயில் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படலாம். இந்த எஞ்சின் 24.47 ஹெச்பி பவர், 25.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே எஞ்சின் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஹோண்டா CB300F மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடலின் பின்புறம் ஒற்றை ஷாக், யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகிறது. புதிய 300சிசி மோட்டார்சைக்கிளில் பெரிய முன்புற வீல், நீட்டிக்கப்பட்ட சஸ்பென்ஷன் டிராவல் மற்றும் வயர் ஸ்போக் ரிம்கள் வழங்கப்படலாம்.
- பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் 220F மாடல் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.
- புதிய பல்சர் 220F மாடலில் காஸ்மடிக், மெக்கானிக்கல் என எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2023 பல்சர் 220F மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பல்சர் மோட்டார்சைக்கிள் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முற்றிலும் புதிய மாடல் என்ற போதிலும் இதன் டிசைன் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் மெல்லிய தோற்றம், கூர்மையான சைடு பேனல்கள் உள்ளன.
இத்துடன் க்ளிப் ஆன் ஹேண்டில்பார்கள், ஸ்ப்லிட் சீட்கள், 2 பீஸ் கிராப் ரெயில் உள்ளிட்டவையும் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 பஜாஜ் பல்சர் மாடலில் ஒற்றை மாற்றமாக OBD-2 விதிகளுக்கு பொருந்தும் எஞ்சின் உள்ளது. இது ரியல்-டைம் காற்று மாசு ஏற்படுவதை டிராக் செய்கிறது.

இவைதவிர 220சிசி, சிங்கில் சிலிண்டர் மோட்டார் 20.11 ஹெச்பி பவர், 18.55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ரியர் ஷாக்குகள் உள்ளன.
பிரேகிங் ஹார்டுவேரை பொருத்தவரை முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், பல்பு இண்டிகேட்டர்கள் உள்ளன. இதில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அனலாக் டக்கோமீட்டர், டிஜிட்டல் ஸ்கிரீன் இடம்பெற்று இருக்கிறது.
இந்திய சந்தையில் 2023 பஜாஜ் பல்சர் 220F மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 37 ஆயிரத்து 126, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பல்சர் 220F முந்தைய வெர்ஷனை விட ரூ. 3 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும்.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கரிஸ்மா பைக் இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்து வந்தது.
- புதிய ஹீரோ கரிஸ்மா மாடலில் 210சிசி லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய கரிஸ்மா மாடலின் மூலம் பாரம்பரியம் மிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டு அவதாரத்தை மீண்டும் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோ நிறுவனம் முற்றிலும் புதிய அடுத்த தலைமுறை கரிஸ்மா மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் முற்றிலும் புதிய எஞ்சின் மற்றும் சேசிஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது.
பிரீமியம் பிரிவில் களமிறங்கி போட்டியை ஏற்படுத்த செய்யும் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மை ஹீரோ நிறுவனம் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பழைய கரிஸ்மா மாடலில் 223சிசி, ஏர் கூல்டு ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் 20 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருந்தது.
புதிய ஹீரோ கரிஸ்மா மாடலில் 210சிசி, லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 25 ஹெச்பி பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய இதர விவரங்கள் மர்மமாகவே உள்ளது.
புதிய தலைமுறை கரிஸ்மா மாடல் அதன் முந்தைய வெர்ஷனை போன்ற ஸ்டைலிங் கொண்டிருக்கும் என தெரிகிறது. கரிஸ்மா பிராண்டு ஹீரோ நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஒன்றாகவும், அதிக பிரீமியம் மாடலாகவும் இருந்து வந்தது. ஹீரோ நிறுவனத்திற்கு அதிகளவு புகழை ஈட்டிக்கொடுத்த மாடலாக கரிஸ்மா விளங்கியது.
எனினும், 2014 வாக்கில் அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதைத் தொடர்ந்து மெல்ல இந்த மாடலின் விற்பனை குறையத் தொடங்கியது. காலப்போக்கில் இதன் விற்பனையும் நிறுத்தப்பட்டு விட்டது. புதிய மோட்டார்சைக்கிள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
புதிய கரிஸ்மா மாடலின் மூலம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் பிரிவில் அதிக பங்குகளை கைப்பற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது ஹீரோ நிறுவனம் எக்ஸ்பல்ஸ் மாடல் மட்டுமே விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எக்ஸ்பல்ஸ் 200S மாடல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்திய சந்தையில் புதிய கரிஸ்மா மாடல் முற்றிலும் புதிய பல்சர் 250s, ஜிக்சர் 250s மற்றும் டாமினர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- பஜாஜ் ஆட்டோ - டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் புதிய மோட்டார்சைக்கிள் உருவாகி வருகிறது.
- இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மோட்டார்சைக்கிள் இந்தியாவிலும் அறிமுகமாகிறது.
பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமாகும் முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போதைய 790சிசி சீரிசின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கும் 490சிசி மோட்டார்சைக்கிளை கேடிஎம் நிறுவனம் நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருந்தது. பேரலெல் டுவின் மாடல் என்ற வகையில், 490சிசி மாடல் அதிக செலவின்றி போதுமான செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கேடிஎம் நிறுவனம் அடுத்த தலைமுறை டியூக் சீரிஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவை 2024 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். கேடிஎம் ஏஜி நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவர், தலைமை செயல் அதிகாரி ஸ்டீஃபன் பைரர் அளித்த சமீபத்திய பேட்டியில் சில தகவல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி, புதிதாக 650சிசி அல்லது 690சிசி மாடல் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய மாடல் 790சசிசி பேரலல் டுவின் பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள பஜாஜ் ஆலையில், இதனை உற்பத்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
கேடிஎம் திட்டப்படி இது நேக்கட், சூப்பர்ஸ்போர்ட் அல்லது அட்வென்ச்சர் மாடலாக இருக்கும் என்றே தெரிகிறது. பஜாஜ் ஆட்டோ உடனான கூட்டணி பற்றி பேசும் போது, பஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார்.
Photo Courtesy: motorcyclenews
- ஹோண்டா நிறுவனம் விரைவில் தனது புதிய ஆக்டிவா 125 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய ஆக்டிவா 125 மாடல் ஸ்மார்ட் கி அன்லாக் உள்பட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்ர் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் புது வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஆக்டிவா 125 மாடல் விவரங்கள் ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய வேரியண்ட் ஆக்டிவா 125 H ஸ்மார்ட் என்று அழைக்கப்பட இருக்கிறது.
புதிய வேரியண்ட்-இல் குறிப்பிடத்தக்க மாற்றமாக அதன் ஸ்மார்ட் கீ இருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட் அன்லாக் வசதி வழங்கப்பட உள்ளது. இது ஸ்கூட்டர் மற்றும் அதன் ஃபியூவல் லிட்-ஐ அதிகபட்சம் 2 மீட்டர் தொலைவில் இருந்தபடி லாக் / அன்லாக் செய்ய அனுமதிக்கிறது. இதில் உள்ள ஸ்மார்ட் ஃபைண்ட் அம்சம் ஸ்கூட்டர் பார்கிங்கில் கண்டறிய ஏதுவாக இண்டிகேட்டர்களை இயக்குகிறது.

இதுதவிர ஸ்மார்ட் ஸ்டார்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இது ஸ்கூட்டரை புஷ் பட்டன் மூலம் ஸ்டார்ட் செய்துவிடுகிறது. இத்துடன் வழங்கப்படும் ஸ்மார்ட் சேஃப் அம்சம் ஸ்கூட்டரை விட 2 மீட்டர்கள் தொலைவுக்கு சென்றதும், ஸ்கூட்டரை லாக் செய்துவிடும். இதுதவிர எல்இடி ஹெட்லைட், சைடு ஸ்டாண்ட் கட் ஆஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
ஆக்டிவா 125 H ஸ்மார்ட் டிசைன் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படுகிறது. அதன்படி புதிய மாடலின் ஹெட்லைட், இண்டிகேட்டர் மற்றும் க்ரோம் பிட் உள்ளிட்டவை எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்படுகிறது. சிங்கில் பீஸ் சீட் மற்றும் கிராப் ரெயில் உடன் பக்கவாட்டு பேனல்களும் மாற்றமின்றி வழங்கப்படுகிறது.
புதிய மாடலிலும் 124சிசி, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது. இது 8.18 ஹெச்பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் சைலண்ட் ஸ்டார்ட் மற்றும் ஐடில் ஸ்டாப் சிஸ்டம் வழங்கப்படுகிறது.






