என் மலர்
- கோகர்ணத்தில் ஆத்மலிங்கத்தை நிலைபெறச் செய்த மகா கணபதியை முதலில் தரிசிப்போம்.
- சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பழமையான சிவத்தலம் திருக்கோரணம்.
'கணேசா கடற்கரை' - கர்நாடகாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டு. ஏன் தெரியுமா?
காசர்கோடு, மங்களூரு, ஆனகுடே, குந்தபுரா, இடுகுஞ்சி, கோகர்ண் என்று புகழ்பெற்ற 6 கணபதி கோவில்கள் இப்பகுதியில் உள்ளன. கதிரவன் தோன்றி மறைவதற்குள் ஒரே நாளில், குடும்பத்துடன் சென்று வணங்கினால் ஆனைமுகத்தானின் அருள் பெற்று குறைவின்றி நல்வாழ்க்கை நடத்தலாம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
எங்களது ஆன்மீக உலாவும் கோகர்ணத்து மகாகணபதியை வணங்கித் தொடங்கியது. மங்களூருவுக்கு வடக்கே முர்டேஸ்வர். அதற்கும் வடக்கே கோகர்ணம். கடற்கரை நகரங்கள். மேற்கே கடல் என்றால், வழி முழுவதும் ஏற்ற இறக்கமாக மலைகள், நீண்டுயர்ந்த தென்னை, பாக்கு மற்றும் பலா மரங்கள், இடையிடையே ஆறுகள். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கே தான் பெரிய ஆறுகள் என்று பார்த்தால், மேற்கிலும் பலபல சிறிய ஆறுகள் - தூய்மையான நீருடன் மரங்கள் சூழ உள்ளது அழகோ அழகு.
கோகர்ணம் மங்களூருவில் இருந்து 238 கிமீ தொலைவில் வடக்கு கன்னரா மாவட்டத்தில், கங்காவல்லி, ஆகனாசினி என்ற இரு ஆறுகளுக்கிடையில் அழகிய கடற்கரைகள் அமைந்த சிற்றூர். இந்த ஆறுகள் கடலில் சங்கமிக்கும் இடம் பசுவின் காது போல் அமைந்திருப்பதால் கோகர்ணா. கோ - பசு, கர்ணா - காது. பூகோள அமைப்பின் படி இது தான் பெயர்க் காரணம்.
கோகர்ணத்தில் ஆத்மலிங்கத்தை நிலைபெறச் செய்த மகா கணபதியை முதலில் தரிசிப்போம். ஊரின் நடுவில் ஒரு சிறிய தெருவுக்குள் தான் மகாகணபதி கோவில், மகாபலேஸ்வர் கோவில் உள்ளன.
கோவிலின் முன்புறம் ஓடு வேய்ந்து கேரள பாணியில் இரண்டு அடுக்காக உள்ளது. கருவறைக்குள் சென்று நம் பிள்ளையாரைத் தொட்டு வணங்கலாம். வலம் வரலாம். 5 அடி உயரத்தில் இரண்டு கரங்கள், தூக்கிய துதிக்கை, பானைத் தொந்தி, குட்டைக் கால்கள், ஆனை போல் வளைந்த நெற்றியுடன் கற்பகக் களிறாகவே காட்சி அளிக்கிறார்.
இரு கரங்களுடன் கணபதி வடிவத்தைப் பார்த்தால் பழமையான சிலையாகத் தோன்றியது. விநாயகர் வழிபாடு தோன்றிய காலத்தால், நான்கு கரங்கள், ஆசனத்தில் அமர்ந்த கோலம் எல்லாம் இல்லாமல், இயற்கையாக ஆனையாகவே பழங்குடி மக்கள் வழிபட்டிருக்கலாம்.
அழகிய ஆனை முகத்தானை அன்புடன் வணங்கி, அவரால் கோகர்ணத்தில் நிலைபெறச் செய்த உலகின் ஒரே ஆத்ம லிங்கமான அருள்மிகு மகாபலேஸ்வரரைக் காணலாமா!
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பழமையான சிவத்தலம் திருக்கோரணம். கர்நாடகாவின் வடக்கு கன்னர மாவட்டத்தில் அரபிக்கடலோரம் அமைந்துள்ள அழகிய சிற்றூர். தேவாரப் பாடல் பெற்ற ஒரே ஒரு துளு நாட்டுத் தலம் கோகரணம். சம்பந்தரும் கோகரணத்து இறைவனை ஏத்தி ஒரு பதிகம் பாடியுள்ளார்.
கருவறைக்குள் சென்று தொட்டு வழிபடலாம். வழக்கமாக நாம் காணும் லிங்கம் போல் அல்லாமல், குழிக்குள் சிறிய வடிவில் அமைந்துள்ளது.
'தெற்கின் காசி' என்று போற்றப்படும் திருக்கோகர்ணத்தில் ஈசன் உலகின் ஒரே ஆத்ம லிங்கமாக, 'மிக வல்லமை யுடையவர்' என்று 'மகாபலேஸ்வர்' ஆக எழுந்தருளியுள்ளார்.
கர்நாடகாவின் 7 முக்தித் தலங்களில் உடுப்பி, கொல்லூர், சுப்ரமணியா, கும்பசி, கோட்டீஸ்வரா, சங்கரநாராயணா ஆகிய இவற்றுடன் கோகர்ணமும் ஒன்று ஆகும். நீத்தார் கடன் இங்கு செய்யப்படுகின்றது.

பொற்செல்வி ஜெயபிரகாஷ்
கயிலையில் இருந்து ராவணன் கொண்டு வந்த ஆத்மலிங்கம் இது என்று கூறப்படுகிறது. இலங்கை கொண்டு செல்லும் வழியில், சிறுவனாக நின்றிருந்த விநாயகரிடம் சற்று நேரம் வைத்திருக்குமாறு கூற, அவர் கீழே வைத்து விடுகிறார்.
அப்புறம் நடந்தது என்ன? சீரங்கத்துக் கதை தான்! வீபிஷணன் இலங்கை கொண்டு சென்ற பள்ளி கொண்ட பெருமாள் திருவடிவத்தை, உச்சிப் பிள்ளையார் சீரங்கத்தில் தரையில் வைத்து, அங்கு நிலை பெறச் செய்தது போல், இங்கும் ஆத்மலிங்கத்தை கணபதி தரையில் வைத்து சிவனாரைக் கோகரணத்தில் இருக்கச் செய்து விடுகிறார். பிள்ளையாருக்கு இலங்கை மேல் என்ன கோபமோ!
ராவணன் தன் பலமனைத்தும் கொண்டு லிங்கத்தைத் தூக்க முயல, முடியவில்லை. ஈசனும் 'மிக வலிமையுடையவராக' 'மகாபலேஸ்வர்' ஆனார். லிங்கமும் பசுவின் காது போல் குழைந்ததால் தலம் கோகரணம் ஆனது.
ராவணன் கோபத்துடன் தூக்க முயன்ற போது லிங்கத்தின் சில பகுதிகள் தாராஸ்வர், குணவந்தேஸ்வர், முர்டேஸ்வர், ஷீஜேஸ்வர் போன்ற இடங்களில் விழ, அவையும் கோகரணத்துடன் சேர்ந்து சிவன் அருள் புரியும் பஞ்ச தலங்களாயின.
இனி கோவிலுக்குள் செல்வோம். மகாகணபதி கோவிலுக்கு அருகில் இருக்கின்றது. திராவிடக் கட்டிடக் கலை மரபில் கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில். கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் சேர்ந்திருக்க, முன்னால் கொடிமரம். கருவறை விமானம் நம் கோவில்களில் இருந்து சற்றே மாறுபட்டு இருந்தது. வலம் வரும் பிரகாரம், அதை அடுத்து சுற்று மண்டபத்துடன் மதில் சுவர்.
கொடி மரத்தின் அருகே மதிலை ஒட்டிய மண்டபத்தில், பெரிய மாடு இருந்தது. நிஜமான நந்தியை சுவாமியின் முன்னால் பார்த்தது இங்கு தான்.
ஈசனின் வலப்புறத்தில் கேரள பாணியில் புதுப்பிக்கப்பட்ட சிறு கோவில் இருந்தது. அம்மன் கோவிலாயிருக்க வேண்டும். 51 சக்தி பீடங்களில் கர்ண (காது) சக்தி பீடம்.
முன் மண்டபத்தில் சிந்தாமணி கணபதி, துர்க்கை சன்னதிகள் இருபுறங்களிலும் உள்ளன. பெரிய சதுரத்தூண்களில் வீரபத்திரர், காளி வேறு சில சிற்பங்கள் தெரிந்தன. எதையும் நின்று பார்க்க முடியவில்லை.
கருவறைக்குள் சென்று சுவாமியைத் தொட்டு வணங்கலாம், எப்படி இருப்பார், நன்றாகப் பார்க்க முடியுமா என்றெல்லாம் ஆவலுடன் உள்ளே நுழைகிறோம்.
தரையில் பித்தளைத் தொட்டி போன்ற அமைப்பு. அதனுள் கருங்கல்லால் ஆன ஆவுடையார் வடிவம். அதன் நடுவில்ஒரு சிறிய வட்டப் பள்ளம். அதன் ஓரத்தில் வெள்ளி பூச்சு இருந்த இடம் விஷ்ணு பாகமாம். பள்ளத்தில் உள்ள நீரைக் கண்ணில் ஒற்றித் தெளித்துக் கொள்ளலாம். பள்ளத்தின் நடுவே, கீழே கருப்பாகத் தெரிந்ததே லிங்கத்தின் மேற்பகுதி. அதையும் தொட்டு வணங்கலாம். மண்டியிட்டுக் குனிந்து தான் தொட முடிந்தது.
ஆத்ம லிங்கத்தின் உச்சிப் பகுதியே நாம் காண்பது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தின் போது முழுமையாகக் காணலாம்.
பார்த்தாலே வேண்டியது அளிக்கும் கோகர்ணத்து ஈசனைத் பார்த்து, தொட்டுத் வணங்கிய நிறைவுடன், இயற்கை அழகை ரசிக்க ஓம் கடற்கரை சென்றோம்.
புகழ் பெற்ற அருள்மிகு மகாகணபதி, மகாபலேஸ்வர் கோவில்களுடன், கோகரணத்தின் கடற்கரைகளும் சிறப்பு வாய்ந்தவை. கோவிலின் முன்னால் சற்று தூரத்தில் கோகர்ணம் கடற்கரை உள்ளது.
கோவிலின் அருகே உள்ள கடற்கரை தவிர, ஓம், ஹாப்மூன், பாரடைஸ், கடலெ மற்றும் பல கடற்கரைகளும் உள்ளன.
'ஓம்' கடற்கரை அருகே வண்டிகள் செல்லப் பாதை உள்ளது. ஆனால் அங்கிருந்து சுமார் 125 பெரிய படிகள் இறங்கிச் செல்ல வேண்டும். கைப்பிடிகளும் இல்லை.
கடற்கரை என்றாலே கால்கள் புதைய நடக்கும் வெண் மணற்பரப்பு, அலைகளின் ஓசை என்று நாம் பார்த்த வங்கக் கடல் போல் இல்லாமல், கடலின் அருகே மலைகள், பாறைகள், மரங்கள், கொஞ்சம் மணல் என்று இருந்தது.
சமஸ்கிருத 'ஓம்' மாதிரி வடிவத்தில் மாசுபடாத, இயற்கை எழில் நடம் புரியும் அழகிய இடம்.
இயற்கையை ரசித்து அனுபவிப்பவர்கள், மலையேற்றம், கடல் விளையாடல் விரும்புபவர்களுக்கு கோகரணத்து கடற்கரைகள் உகந்த இடமாகும்
தொடர்புக்கு-anarchelvi@gmail.com
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நிரந்தரமாக கோவில் தேர் இருக்கும்.
- தேர் செய்வதற்கு பனைமரம் புளியாமரம் காட்டுவாமரம் போன்ற மரங்களை பயன்படுத்தி ஒர் புதிய அழகான தேர் உருவாக்கப்படுகிறது.
மேல்மலையனூரில் வருடந்தோரும் மாசி மாதம் தேர்திருவிழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்கதர்கள் சாமி திரசனம் செய்வார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நிரந்தரமாக கோவில் தேர் இருக்கும். ஆனால் மேல்மலையனூரில் மட்டும் வருடந்தோறும் ஒர் புதிய தேர் செய்யப்படுகிறது. இந்த தேர் 15 நாட்களில் பச்சசை பனைமரங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது.
தேர் செய்வதற்கு பனைமரம் புளியாமரம் காட்டுவாமரம் போன்ற மரங்களை பயன்படுத்தி ஒர் புதிய அழகான தேர் உருவாக்கப்படுகிறது. மேல்மலையனூர் தேர் சக்கரம் தேவர்களாக பாவிக்கப்படுகிறது.
- திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
- பிரம்மாவே இங்கு யாகம் செய்தும், தவம் செய்தும் பிரம்ம பதவியைப் பெற்றார்.
இமயத்தில் சிவபெருமானை உதாசீனம் செய்துவிட்டுத் தக்கன் யாகம் செய்தார். தமது கணவனை அவமதித்த தங்கள் யாகத்தை தடுக்கச் சென்ற பார்வதி தேவியைத் தக்கன் அவமதித்து விட்டார். அதனால் பிராணத்தியாகம் செய்த பார்வதி தேவியின் உடலை, சிவபெருமான் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தார். இதனைப் பார்த்த திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலின் பாகங்களைத் துணித்தார். ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு பாகம் விழுந்தது. ஆவேசம் தணிந்த சிவபெருமான் மகாமயானமான காசிக்கு, மீதமுள்ள உடல் பாகத்தைக் கேதார நாத்திலிருந்து கொண்டு வந்தார். மகாமயானத்தில் பார்வதி தேவியின் உடலை அக்கினியில் இடமுனைந்தார்.
சிவபெருமான் பார்வதி தேவியின் காதில் தாரக மந்திரம் உபதேசம் செய்தார். அப்போது அவரது காதிலிருந்த காதணி எங்கேயோ விழுந்து விட்டதை அறிந்தார். அப்போது அங்கே திருமால் தமது சக்கரத்தால் ஒரு தீர்த்தக் கிணறு தோண்டி, அதனருகே அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தார். சிவன் அவரை அணுகி பார்வதி தேவியின் காதணி பற்றிக் கேட்டார். திருமால் தாம் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே உள்ள கிணற்றைச் சுட்டிக் காட்டினார். சிவபெருமான் அக்கிணற்றை எட்டிப்பார்க்கையில் அவரது காதிலிருந்த குண்டலமும் கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றினுள்ளிலிருந்து பிரகாசமான பேரொளியுடன் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்தச் சிவலிங்கத்தில் சிவபெருமானின் சக்தியும் பார்வதி தேவியின் சக்தியும் ஒன்றாக ஐக்கியமாகி இருந்தது.
திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பெருமானை நோக்கித் தமது தவத்தை தொடர்ந்து மேற்கொண்டார். சிவபெருமான், திருமால் முன்பு விசுவரூபம் கொண்டு தோன்றினார். திருமால் விரும்பும் வரம் யாதெனக் கேட்க, அவர் இங்கு பிரதிஷ்டை செய்த ஜோதிர் லிங்கத்திலிருந்து எப்போதும் மக்களை ஆசிர்வதிக்க வேண்டினார். மேலும் சிவபெருமான் ஜடாமுடியிலிருக்கும் கங்கை இத்தலத்தில் வந்து சிவபெருமானை அர்ச்சிப்பதுடன், இத்தலம் வந்து கங்கையில் நீராடும் மக்களுடைய பாவங்களைப் போக்க வேண்டும் எனவும், சிரார்த்தம் செய்தால் அவர்கள் பாவம் எல்லாம் விலகி புனிதம் அடைந்து சுவர்க்கம் போக வேண்டும் எனவும் வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரம் தந்து, தாமும் அந்த லிங்கத்தில் ஒளியாக ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருமாலுக்கு விசுவரூபம் காட்டித் தந்தமையால், சிவலிங்கத்திற்கு விசுவநாதர் எனப்பெயர் உண்டாகியது. .
அதன்பின்பு விசாலாட்சியாக அவதாரம் கொண்டிருந்த அன்னை பார்வதி தேவியை, சிவபெருமானுக்குத் திருமால் திருமணம் செய்து வைத்தார். பிரம்மதேவர் பல யாகங்கள் செய்து அவர்கள் திருமணத்திற்கு உதவி செய்தார். இவ்வாறு திருமாலின் வேண்டுதலின்படி ஜோதிர்லிங்கமாகத் தோன்றிய சிவன் விசுவநாதர் என வழங்கப்பட்டு வருகிறார். காசியைப் பற்றி ஏகப்பட்ட புராணக் கதைகள் உள்ளன. ஏனெனில் காசியம்பதி வேதகாலம், புராண காலத்திற்கு முற்பட்டது. பல தேவர்களும், முனிவர்களும், மன்னர்களும், இங்கு தவம்செய்து பேறு பெற்றுள்ளார்கள். சூரியனின் புத்திரர்கள் எமனும், சனி பகவானும் சிவபெருமானை நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும், எமலோகத்திற்கு அதிபதியாகவும், பதவி பெற்றார். சனிதேவன் சிவபெருமான் அருளால் நவக்கிரகங்களில் ஒரு கிரகமாகப் பதவி பெற்றார்.
பிரம்மாவே இங்கு யாகம் செய்தும், தவம் செய்தும் பிரம்ம பதவியைப் பெற்றார் எனில், காசியின் மகிமையும் தொன்மையும் யாரால் எடுத்துக் கூற முடியும்? சப்தரிஷிகள் என்னும் ஏழு ரிஷிகளும் இங்கு தவம் செய்து, சிவபெருமான் அருளால் நட்சத்திரப் பதவியடைந்துள்ளார்கள். காசியில் இரவு பூஜை சப்த ரிஷிகள் பூஜை என மிகவும் சிறப்பாக, தினசரி நடைபெறுவதால் இத்தலத்தை அவர்கள்தான் தாபித்தார்களோ என ஓர் எண்ணம் உண்டாகிறது. இராமபிரான் முன்னோர்களில் ஒருவரான ஹரிச்சந்திரன் வரலாறு அறியாதோர் இலர். அவர் விசுவாமித்திரர் சோதனைக்குட்பட்டு காசியில் வந்து சுடலையைக் காத்து, மனைவியைப் பிறர்க்கு விற்றுத் துன்பப்பட்டும், பொய்யே பேசாமல் முடிவில் சிவபெருமான் அருளால் இழந்த செல்வம் எல்லாம் பெற்று சுபிட்சம் அடைந்தார். இதிசாக காலத்தில் இராமர் இங்கிருந்து சிவலிங்கம் கொண்டு சென்று, இராமேசுவரத்தில் வைத்து வழிபட்டு, இராவணனை வதைத்த தோஷம் நீங்கப் பெற்றார் என இராமயணத்தில் வரலாறு காண்கிறோம்.
மகாபாரதக் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காசி வந்து வழிபாடுகள் செய்ததாகவும் மகா பாரதத்தில் வரலாறு கூறப்படுகிறது. இன்னும் இப்படி எத்தனையோ புராணங்கள் காசிப் பதியைப் பற்றியுள்ளன. புராண காலத்தில் சத்தியபுரம் என்னும் ஊரில் பூரித்தியும்னன் என்பான் அரசாண்டு வந்தான். அவனுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள். இன்பத்தில் மூழ்கியிருந்ததால் அவனால், அரசாட்சியை சரிவர கவனிக்க இயலவில்லை. இதனைச் சாதகமாக்கி அவனது விரோதிகள் அவனை நாட்டை விட்டுத் துரத்தி விட்டனர். விபாவரை என்னும் தமது பட்டத்து ராணியை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, மன்னன் விந்திய மலைச்சாரலில் வந்து வாழ்ந்து வந்தான். வறுமையின் கொடுமையால் தன் மனைவியையே கொன்றுவிட்டான். அவள் மாமிசத்தை உண்ணப் போகும் போது, இரண்டுசிங்கங்கள் அங்கே வர பூரித்தியும்னன் ஓடிவிட்டான். அப்படி அவன் ஓடும்போது அவன்எதிரே வந்த நான்கு பிராமணர்களைக் கொன்று தின்ன முற்பட்டான். அப்போது பிராமணர்களது கையிலிருந்த வேத ஏடுகள், மான்தோல் ஆசனம், அவர்கள் அணிந்திருந்த பூணூல் இவைகளைக் கண்டதாலும் தொட்டதாலும் அவனுக்குப் புத்தி தெளிந்தது.
பூரித்தியும்னன் தான் செய்த பெண் கொலை, பிராமணர்கள் கொலை இவைகளினால் பாவ ஆத்மாவாக ஆகிவிட்டதை உணர்ந்தான். பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பற்றவே அவன் பெரும் சண்டாளன் ஆகிவிட்டான். காட்டில் அலைந்து சாகல்யா என்ற தவமுனிவரைக் கண்டு பாவவிமோசனம் கேட்டான். அந்த முனிவர் ஐந்து கருப்புத் துணிகளைக் கொடுத்து அவனை உடுத்திக் கொள்ளக் கூறினார். காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி விசுவநாதரைத் தரிசித்தால் பாவ விமோசனம் ஆகும் என்று கூறினார். அவனும் முனிவர் சொற்படி, காசிக்குச் சென்றான். அவன் காசிமண்ணை மிதித்ததும் ஒரு துணி வெண்மை ஆகிவிட்டது. கங்கையில் மூழ்கி எழுந்தான். என்னே ஆச்சர்யம்! இறந்த அவனது மனைவி அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு உடன் எழுந்தாள். மற்றும் ஒரு கருப்பு ஆடை வெண்மை ஆகிவிட்டது. இரண்டு ஆடைகளையும் கங்கையில் அவிழ்த்து விட்டு மூன்று ஆடைகளுடன் கரையேறினான்.
இரண்டாவது அதிசயம்! இவனால் கொல்லப்பட்ட நான்கு பிராமணர்களும் கரையில் நின்று கொண்டு தம்பதிகள் இருவரையும் வரவேற்றனர். அவனதுபாவம் தீர மந்திரம் ஓதி அட்சதை தெளித்தனர். மூன்றாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. கணவன் மனைவி இருவரையும் மணி கர்ணிகா கட்டத்தில் அவர்கள் மூழ்கச் செய்தனர். நான்காவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. பின்பு விசுவநாதரைத் தொட்டு, பக்தியுடன் வழிபடக் கூறினர். அவ்விருவரும் அதன்படியே வழிபட, ஐந்தாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. அவனது பாவங்கள் எல்லாம் நீங்கிப் புனிதன் ஆனான். விசுவநாதர் ஆலயத்தின் முன்பு அவர்கள் இருவரையும் அவனது எதிரிகள் அன்புடன் வரவேற்றனர்.
நாட்டிற்கு அழைத்துச் சென்று, அவனது அரசை அவனிடமே கொடுத்து, மீண்டும் பூர்த்தியும்னனை அரசனாக்கினர். எனவே கங்கையில் மூழ்கி காசி விசுவநாதரைத் தரிசித்தால் கொடிய பாவங்களும் நீங்கிவிடும். எனவேதான் காசிக்கு விடும் பக்தர்கள், தம்பதிகளாக, இரு ஆடைகள் அணிந்து கங்கையில் மூழ்கி, ஓர் ஆடையை கங்கை நீரில் விட்டுவிட வேண்டும் என்கின்றனர். கரைக்கு வந்து பிராமணர்களைத் தரிசித்து அவர்களுக்கு தானம் வழங்க வேண்டும் என்றும் கூறுவர். விசுவநாதர் ஆலயம் சென்று விசுவநாதரைத் தொட்டு வழிபட வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றனர். அவ்வாறு செய்தால்தான், நாம் நம்மையும் அறியாமல் செய்த பாவங்கள் கூட விலகும் என்கின்றனர்.
இவ்வரலாற்றினால் நாம் கங்கை நீராடும் முறைக்கு விளக்கம் அறிகின்றோம். மாபலிச்சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்ட நாராயணன், திருவிக்கிரமராக ஓங்கி வளர்ந்து உலகளந்து விட்டு, மற்றொரு காலை தேவலோகம் வரை நீட்ட, ஆகாச கங்கை நீர்கொண்டு பிரம்மா அத்திருப்பாதத்தைக் கழுவிப் பூஜித்தார். அப்போது பெருக்கெடுத்து ஓடிய கங்கை நீரைச் சிவபெருமான் தன் சடையில் தாங்கிப் பூமியில் விட்டார். அந்த கங்கையே காசியில் புனிதத்தீர்த்தமாக விளங்குகிறது என்கின்றனர்.
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.
- பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது.
- மகாராஜா ரஞ்சித்சிங் கோவிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார்.
விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது. விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தர வாகினி என்று அழைக்கின்றனர்.
தீர்த்தக் கட்டங்கள்: கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும். அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகிறார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும். பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.
மகாராஜா ரஞ்சித்சிங் கோவிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். காசியில் மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றுமே அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன்பிறகே சூட்டப்பட்டது. பொதுவாக வயதானவர்களே இந்த தலத்திற்கு போய்வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இளைஞர்களும் இங்கு சென்றுவரலாம். ஏனெனில் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒரு அறிவுத் திருத்தலம் ஆகும். கல்வியும் ஞானமும் தரும் புண்ணிய ஸ்தலம் இது. காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டிவிநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் என்னைப் போல் அரைகுறையாகத் தான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்வதைப் போல இந்த விநாயகரின் வடிவமைப்பு அமைந்துள்ளது. எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபடவேண்டும்.
பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது. காசி என்றால் மிகப் பிரகாசம் என்று பொருள். பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர். பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர். சிவபெருமான் விரும்பி மகாமயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர். கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில்சுமந்துகொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர். வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.
பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது. அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர். இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது. அதிக வெப்பகாலம், அதிக மழைக்காலம், தவிர ஆண்டு முழுதும் காசியாத்திரைக்கு ஏற்ற காலங்கள் ஆகும். முன்பெல்லாம் கால்நடையாகவோ, மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் யாத்திரை போவார்கள். ஆனால் தற்போது ரெயில், பேருந்து, விமானம் மூலம் யாத்திரை செய்வதால் எப்பொழுது வேண்டுமானாலும் காசியாத்திரை மேற்கொள்ளலாம்.
நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும். நம் நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது, காசி - இராமேசுவரம் யாத்திரை மேற்கொள்ளும் சிறப்புமிக்க தலம் காசி ஆகும். பூலோகக் கைலாசம் என்று சைவர்கள் போற்றும் தலம். காசிக்கு நிகரான தலம் மூவுலகிலும் இல்லை என ஆன்மீகவாதிகள் கூறுவர். ஈசன் காக்கும் மகாமயானம் இங்கே உள்ளது. காசியில் இறப்போர் உடனே மோட்சம் அடைவார்கள். காசி என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். இங்கே இறக்கும் உயிர்களுக்குச் சிவபெருமான் காதில் ராமமந்திரம் ஓதி மோட்சம் அடைய வழி செய்கின்றார். காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும். நம் நாட்டிலுள்ள புனிதத்தலங்களில் தலை சிறந்த தலம் காசிப்பதியே ஆகும். லோகமாதா அன்னபூரணி காசியம் பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார். காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், காசியில் காவாசி அவினாசி என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர். தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.
கங்கையின் மகிமை உணர்ந்தவர்கள், சிவகங்கை, நூபுரகங்கை, கங்கைகொண்ட சோழபுரம் எனவும் தங்கள் ஊர்களுக்குப் பெயரிட்டு மகிழ்கின்றனர். மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும். அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி. மகாராஜா ரஞ்சித் சிங், காசி விசுவநாதர் ஆலய விமானத்தைப் பொன் தகடுகளால் வேய்ந்தார்.
இன்றும் கோபுரம் தங்கமாக ஒளிர்கிறது. கோவில் தூண்களில் சிற்பங்கள் உள்ளன. காசியில் மீட்டருக்கு ஒரு கோவில் எனப் பலகோவில்கள் உள்ளன. கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும். சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில். காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.
- ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம்.
- குழந்தையின் கல்வி ஞானத்திற்கும் தாய், தந்தையின் கல்வி ஞானத்திற்கும் சம்பந்தம் இருக்காது.
ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன் மற்றும் புதன் இணைவினால் உருவாகும் இந்த யோகம் பலருக்கு கல்வியில், தொழிலில், உத்தியோகத்தில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய திருப்பு முனையைத் தந்து உள்ளது.
ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் புத ஆதித்திய யோகம் என்று கூறுவார்கள். சூரியன், புதன், சுக்கிரன் இந்த மூன்றும் முக் கூட்டு கிரகங்கள். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் சூரியன், புதன், சுக்கிரன் இந்த 3 கிரகங்களும் அடுத்தடுத்த கட்டங்களிலேயே இருக்கும். அதனால் இவை முக்கூட்டு கிரகங்கள் என்று அழைக்கப்படும். புதன் சூரியனை விட்டு 29 பாகைக்கு மேல் விலகுவதில்லை. இதை வைத்தே ஒருவரின் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளதா என்பதை எளிமையாக கண்டறிய முடியும். ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் புத ஆதித்திய யோக அடிப்படையில் ஜாதகர் கல்வி கேள்வியில் சிறந்து விளங்க வேண்டுமல்லவா? ஜாதகத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து இருக்கும் பலர் பள்ளி இறுதிப் படிப்பை கூட முழுமையாக முடிக்காதவர்கள். 30 வருடத்திற்கு முன்பு இந்த யோகம் அமையப் பெற்றவர்களில் பலர் மழைக்காக கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லை. சில குழந்தைகளுடைய பெற்றோர்கள் நல்ல கல்வி பயின்று உயர்ந்த உத்தியோகம், பதவியில் இருப்பார்கள். ஆனால் குழந்தைகள் பெற்றோருக்கு எதிர் மறையாக இருப்பார்கள். சில பெற்றோர்களுக்கு அடிப்படை கல்வி ஞானம் கூட இருக்காது. ஆனால் பிள்ளைகள் படிப்பில் படு சுட்டியாக கெட்டியாக இருப்பார்கள்.
குழந்தையின் கல்வி ஞானத்திற்கும் தாய், தந்தையின் கல்வி ஞானத்திற்கும் சம்பந்தம் இருக்காது. அதே போல் எந்த படிப்பு அறிவும் இல்லாத பலர் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டு சாதனையாளராக வலம் வருகிறார்கள். ஆங்கில பள்ளிக் கூடத்தில் படித்த பலர் அரை குறை ஆங்கிலம் பேசுகிறார்கள். பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத பலர் இலக்கணப் பிழையே இல்லாமல் தெளிவாக ஆங்கிலம் எழுதுவார்கள், பேசுவார்கள். இது போன்ற அனைத்திற்கும் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள புத ஆதித்ய யோகம் மட்டுமே காரணம்.இந்த கிரகச் சேர்க்கை பற்றிய பல அரிய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்களாம் வாங்க.
சூரியன்
நவகிரகங்களில் சூரியன் முதன்மையான கிரகமாகும். பிரபஞ்ச சக்தி உண்மையா? என நாத்திகம் பேசுபவருக்கு நெத்தியடி கொடுக்கும் கண் கண்ட தெய்வம் சூரியன். ஒன்பது கிரகங்களில் நம் கண்ணுக்குத் தெளிவாக புலப்படுபவர் சூரியபகவான். கால புருஷ 5-ம் அதிபதியான சூரியன் ஆத்ம காரகன் என்பதால் சூரியன் பலம் பெற வேண்டும்.
ஆன்மா பலம் பெற்றால் மட்டுமே நிம்மதியாக தைரியமாக எதையும் செய்து முடிக்க முடியும். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தனது சுய சிந்தனையுடன் சுயமாக முடிவு எடுக்கக் கூடிய நபராக இருப்பார். வாழ்க்கை ஒலிமயமாகும். அடைய முடியாத வெற்றிகளே கிடையாது. இவருக்கு எப்படியும் நிறைந்த கல்வி உணவு,உடை, இருப்பிடம், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற அடிப்படை தேவைகள் குறித்த காலத்தில் கிடைத்து விடும். அதே போன்று நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கும். ஜனன கால ஜாதகத்தில் சூரியன் சுப பலத்துடன் இருந்தால் உடல் தேஜஸ் பெறும், நிர்வாக திறமை, தலைமை தாங்கும் இயல்பு, பிரபல மனிதர்களுடன், சமூகத் தொடர்புகள், சமுதாய அங்கீகாரம் அரசு உத்தியோகம், அரச பதவி ஆகியவை கிடைக்கும். எதிலும் அதிகாரத்துடன் இருப்பார்கள் அரசு, அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சூரிய பலம் மேன்மையை தரும். வாழ்வில் வெற்றி பெற சூரிய பலம் மிக முக்கியம்.
புதன்
நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்துள்ள முதல் கிரகம் புதனாகும். கிரகங்களில் மிகச் சிறிய கிரகமாக இருப்பதால் சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுற்றக்கூடிய கிரகம் புதனாகும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் என்பதால் புதனுக்கு வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். புத்தி, அறிவு, ஞானம் ஆகியவற்றை வழங்குவதால் புத்திகாரகன் என்று பெயர். ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகம் என்பதால் வித்யாகாரகன் என்ற பெயரும் உண்டு. புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள்.
ஜனன ஜாதகத்தில் புதன் பலம் பெற்றவர்கள் இளமைப் பொழிவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கணக்கியல், மறைமுகமான, நுணுக்கமான பிரச்சினைகளை தீர்ப்பதில் நிபுணராக இருப்பார்கள். வியாபார தந்திரம் மிக்கவராகவும், மதிநுட்பத்தை பயன்படுத்தி இருந்த இடத்திலேயே தொழில் செய்து வருமானம் செய்பவராக இருப்பர். ஒயிட் காலர் ஜாப் செய்பவர் என்றும் கூறலாம்.
பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் புதன் தனித்தன்மையுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவிற்கு நிகரான சக்தி உண்டு. அதே நேரத்தில் புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம். தான் சேரும் கிரகத்திற்கு, இடத்திற்க்கு தக்கவாறு பார்க்கும் கிரகத்திற்க்கு தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார். புதன் பலம் பெற்றவர்கள் நகைச்சுவை உணர்வு மிகுந்தவுர். ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல் , சிற்பம் வடித்தல் , சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், சாஸ்திர ஞானம் , நுண்கலைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், உலகம் போற்றும் நகைச் சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கை துறையினர், அரசியலை அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள், மிகச்சிறந்த வியாபாரிகள், ஆலோசகர்கள், கல்வியாளர்கள், ஓவியர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள்.
புத ஆதித்ய யோகம்
சூரியனுக்கு முதல்வட்ட பாதையில் புதன் இருப்பதால் சூரியனின் வெப்பத்திற்கு ஈடு கொடுத்து, அதாவது சூரியனின் ஈர்ப்பு விசை உள்ளிழுக்கப்பட்டு அழிந்து விடாமல் புதன் தன் பாதையில் சுற்றி வரும்படி புதனின் கட்டமைப்பு அமைந்துள்ளது. சூரியனிடமிருந்து வெளிவரும் அனைத்து கதிர்களையும் தன்னகத்தே தேக்கிக் கொள்ளும் தன்மையை புதன் பெற்றுள்ளது. அதனால் தான் மனிதனின் நினைவாற்றலுக்கும் புத்திக் கூர்மைக்கும் பொது அறிவிற்கும் புதனையே காரக கிரகம் என்கிறோம்.
மனித உடலில் தலைப் பகுதியைக் குறிக்கும் கிரகம் சூரியன். சூரியனுக்கு மிக அருகிலேயே சுற்றும் கிரகம் புதன். தலையின் முக்கிய அங்கமாகவும் உடலியக்கத்திற்கு மிக முக்கிய அங்கமாகவும் உள்ள மூளையை ஆளுமை செய்வதால் அனைத்து விதமான அறிவையும் ஆற்றலையும் கொடுப்பவர் புதனாகும். சூரியனை விட்டு விலகாமல் சுற்றி வருவதால் புதனை வெறும் கண்களால் பார்க்க இயலாது.
மனித உடல் செயல்பாட்டிற்கு பல உறுப்புகள் காரணமாகிறது. அந்த உறுப்பு செயல்பாட்டிற்கு பல சுரப்பிகள் காரணமாகிறது. மனித மூளையின் அடிப்பகுதியில் சுரக்கும் நாளமில்லா சுரப்பியான "பிட்யூட்டரி'' சுரப்பி தான் நினைவாற்றலையும் சிந்தனை நுண்ணறிவையும் தூண்டுவதாக மருத்துவம் கூறுகிறது. புதன்கிரகமே இச்சுரப்பியை தன் ஆளுமைக்குள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. புதன் ஒருவர் மட்டுமே தனித்திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும் போது, அவர் சேரும் கிரகம் சுபரானால், தன்னைச் சுபராகவும் அந்தக் கிரகம் பாபரானால் தன்னையும் பாபராகவும் தனது நிலையை மாற்றிக் கொள்வார்.
புதன் பலம் குறைந்திருப்பவர்கள், நுண்ணறிவுத் திறன் குறையப் பெற்றிருப்பவர்கள், மனக்குழப்பம் அடைவார்கள். நுரையீரல், சிறுநீரகம், நரம்புத்தளர்ச்சி, ஜீரண உறுப்புகளின் கோளாறு, உடல் நலம் பாதிக்கும். சூரிய பலம் குறைந்திருப்பவர்கள் ஆன்மபலத்தை இழப்பார்கள். இதயம் தொடர்பான நோய்கள் ஏற்ப்படும். நிர்வாகத்திறன் குறையும். சூரியன் என்றால் ஆன்மா, புதன் என்றால் புத்தி. ஆன்மாவும் புத்தியும் இணையும் போது மட்டுமே மனிதர்களுக்கு ஆன்ம பலம் பெருகும். ஆத்ம பலம், ஞானத்தை தரும் சூரியனுடன் புத்தி காரகன், வித்யா காரகன் புதன் சேரும் போது மனிதனுக்கு அளவில்லாத வாழ்வியல் ஞானம் ஏற்படுகிறது. ஆன்ம பலத்தால் அடைய முடியாத வெற்றியே கிடையாது.மனித வாழ்வில் அறிவுக் கண்ணை திறப்பதில் முதலிடத்தில் இருப்பதும் கல்வி தான். அந்த கல்வியில் தனித்து வத்துடன் விளங்க புத ஆதித்ய யோகம் அவசியம்.
அதே போல் பலர் புத ஆதித்ய யோகம் கல்விக்கு மட்டுமே பலன் தரும் என்று நினைக்கிறார்கள். மனிதர்கள் வாழ்வில் அனைத்து விதமான வெற்றியை வழங்க கூடிய யோகமாகும்.
சூரியனுடன் புதன் இணையும் போது அவர் நன்மை தரும் சுபராக செயல்படுவாரா அல்லது தீமை தரும் பாபராக இருப்பாரா என்று கணிப்பதில் சிக்கல் ஏற்படும். அனுபவமுள்ளவர்களையும் தடுமாற வைக்கும். சூரியன் புதன் இவர்களை பார்க்கும் கிரகங்களின் நிலை, ஆதிபத்தியம் ஆகியவற்றைக் கொண்டு பலனைச் சீர்தூக்கி பார்க்க வேண்டும். இதை எளிமையாக 8 விதிகளில் பலன் கூறி விடலாம்.
1. சூரியனுக்கும் புதனுக்கும் பாகை அடிப்படையில் 7 டிகிரி மட்டுமே வித்தியாசம் இருக்க வேண்டும். சூரியனுடன் குறிப்பிட்ட பாகையில் புதன் இணைந்திருக்கும் போது அஸ்தமனம் ஏற்படும். அஸ்தங்கக் கதியில் இருக்கும் புதன் நற்பலன்கள் தருவார். புதனுக்கு அஸ்தங்க தோஷம் கிடையாது.
2. புதனுக்கு அடிக்கடி வக்கிரகதி ஏற்படுவதுண்டு. ஆனால் புதன் வக்கிரகதியில் இருந்தால் மனக்குழப்பம் தருவார் என்பதால் புதன் வக்ரம் பெறாமல் இருப்பது சிறப்பு.
3. சூரியன் அல்லது புதனுக்கு ராகு, கேது, சனி சம்பந்தம் இருக்கக் கூடாது. சூரியனோ, புதனோ ராகு, கேது, சனி சாரம் பெறக்கூடாது.
4. சூரியன் புதனை நோக்கி சென்றால் தந்தை அதிக புத்திசாலி, கல்வியில் சிறந்து விளங்கியவர், கணித நுண்ணறிவுடையவர், நிர்வாகப் பதவியில் இருப்பார் அல்லது சிறந்த வியாபாரி. அதே போல் குழந்தையும் தந்தைக்கு இணையாக சகல செயல்களிலும் வல்லமை பெறும்.
5. சூரியன் புதனை நோக்கிச் செல்லும் அனைவருக்கும் பாவக, காரக ஆதிபத்திய ரீதியாக ஏதாவது ஒரு சில நன்மை உண்டாகும்.
6. புதன் சூரியனை நோக்கி சென்றால் தந்தைக்கு படிப்பறிவு குறைவு, அடிமைத் தொழில், படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலை. அதே போல் குழந்தைக்கும் கல்வி ஞானக் குறைவு ஏற்படும்.
7. சூரியன் புதனை நோக்கி சென்று ஜீவ காரகன் குருவையோ அல்லது கல்வி, தொழில் டி. வி, பத்திரிக்கைகளில் வரும் பாராட்டுதலுக்கு உரிய வகையில் இருக்கும்.
8. புதன் ஒருவரே மறைவு ஸ்தானங்களான 3,6,8,12ல் இருக்கும்போது நற்பலனைத் தருவர். மறைந்த புதன் நிறைந்த பலன் உண்டு. இவர் சூரியனுடன் சேர்த்து ஒரே ராசியில் இருக்கும் போது புதஆதித்திய யோகம் உண்டாகும். சூரியன், புதன் ஆகியோரின் பலம், ஆதிபத்தியம் சுப அசுபர்களின் இணைவு, பார்வை ஆகியவற்றின் தன்மையைப் பொறுத்து பலன்கள் அளவு கூடவோ குறையவோ செய்யும்.
பரிகாரம்
சுய ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் இல்லாதவர்கள் கல்வியில் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் புதன் கிழமை வரும் பிரதோசத்திற்கு செல்ல புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
- கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
- அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.
திரிம்பகேஸ்வரர் கோவில், திரிம்பாக் திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான இந்துக் கோவில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.
- 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
- ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்கிருந்த குடியிருப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்மநபர்கள் தீ வைத்தனர்.
இந்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 2 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் கரூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 14 வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக 14 தற்காலிக போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இரவு நேரங்களில் சோதனை சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விசாரணை நடத்தி அவர்களுடைய முகவரிகளை கேட்டு எழுதப்பட்ட பின்னரே அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம், முதற்கட்டமாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே நேற்று மேலும் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மேலும் நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரியில் இருந்து 600 போலீசார் வரவழைக்கபட்டு, மொத்தம் 750 போலீசார் ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் கரும்பு ஆலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், நாமக்கல் எஸ்.பி கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் உள்ளிட்டோர் வெல்ல ஆலைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் கூறியதாவது:- ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் 20 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக சோதனை சாவடிகள் மற்றும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேற்கு மண்டலத்தில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் கள்ளசாராயம் விற்பனை ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- கூவத்தூர் அருகே 2 பேரிடம் 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- 2 பேரை கூவத்தூர் போலீசார் கைது செய்தனர்.
கூவத்தூர் அடுத்த முகையூர், கோலாவாஞ்சி காட்டுப்பகுதியில் கஞ்சா விற்ற புதுப்பட்டினத்தை சேர்ந்த முபாரக் அலி,தென்பட்டினத்தை சேர்ந்த தனுஷ் ஆகிய 2 பேரை கூவத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி.
- கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி.
மூலவர்: காசி விஸ்வநாதர்
அம்மன்/தாயார்: விசாலாட்சி
தீர்த்தம்: கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.
பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்.
திருவிழா: தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி.
தல சிறப்பு: இந்தியாவில் 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள். காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.
இந்த கோவிலை முதன்முதலில் கட்டியது யார் எனக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோவிலின் பழங்கால வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோவில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப்பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோவில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். இதிலிருந்து காசி கோவில் ஒரு புண்ணி சத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின் சின்னம் என்பதும் நமக்கு புரிகிறது.
இங்கு அன்ன பூரணி, சத்திய நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். விசுவநாதர் கோவில் கர்ப்பகிருகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.
கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி. ஆதி விசுவநாதர் கோவிலிருந்த இடத்தில் மசூதி உள்ளது. அந்த நந்தியின் அருகேதான் ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோவில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்த கோவில் மிகவும் சிறிய கோவில் தான். குறுகலான பாதையில் சென்று கோவிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்னபூரணி கோவிலும், விசாலாட்சி கோவிலும் தனியே சிறிது தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோவில் நமது தென்னாட்டுப் பாணியில் உள்ளது. இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. அன்னபூரணி அம்பாள் கோவிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.
பிரார்த்தனை:
வியாச காசியில், வியாசர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம். காசிக் காவலர் பைரவர் கோயிலில், காசிக் கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால், நம்மைத் தீய சக்திகள் அண்டாது. கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விசுவநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது - என்று முனிவர்கள் பலர் கூறியுள்ளனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் தம் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
- இந்துக் குறியீடான ஓம் என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள்.
- இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
ஓங்காரேஸ்வரர் கோவில், சிவபுரி, இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும்.
இது நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா என்னும் தீவொன்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
இது மத்தியப் பிரதேசத்திலுள்ள மோர்ட்டக்கா என்னும் இடத்திலிருந்து 12 மைல் (20 கிமீ) தொலைவில் உள்ளது. இத்தீவின் வடிவத்தை இந்துக் குறியீடான ஓம் என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள்.
இத்தீவில் அமரேஸ்வரர் கோவில் என இன்னொரு கோவிலும் உள்ளது.







