தமிழ்நாடு செய்திகள்

இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-05-21 22:00 IST   |   Update On 2025-05-21 22:00:00 IST
  • 8 மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பான பதிவை ராகுல்காந்தி பகிர்ந்திருந்தார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் விவகாரம் தொடர்பாக 8 மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பான பதிவை மக்களவை எதிர்கட்சிதலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

அன்புள்ள சகோதரரே, மாநிலங்களின் உரிமைகளையும் நமது இந்தியாவின் கூட்டாட்சி உணர்வையும் பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News