தமிழ்நாடு செய்திகள்
null

'அவர்தானே சிபிஐ கேட்டார்; ஆஜராகி வரட்டும்' - விஜய் டெல்லி பயணம் குறித்து குஷ்பு கருத்து!

Published On 2026-01-11 17:46 IST   |   Update On 2026-01-11 17:46:00 IST
  • படத்திற்கான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றபின்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கவேண்டும்.
  • முழுக்க முழுக்க திமுகவைதானே குறைக்கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜன நாயகன் தணிக்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

"பராசக்தியை ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் ரிலீஸ் செய்துள்ளது. மத்திய அரசு தடைசெய்யவேண்டும் என்றால், ரெட் ஜெயண்ட் படத்திற்குத்தான் தடைவிதித்திருக்க வேண்டும். ஏனெனில் எங்களுக்கு எதிரி திமுகதான். ஜன நாயகன் குறித்து பேசுபவர்கள் மூளையில் இருக்கும் அறிவைப் பயன்படுத்தமாட்டார்களா? குழந்தை அழுதால்கூட மோடியை காரணம் கூறுபவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

படத்திற்கான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றபின்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கவேண்டும். அதுதான் அடிப்படை விதி. இது தயாரிப்பாளர்களின் தவறு. பின்னர் மத்திய தணிக்கை வாரியத்தை தவறு கூறாதீர்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விடுமுறை நாட்கள் இடையில் இருந்துள்ளன. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அவர்கள் 24 மணிநேரமும் உங்களுக்காக வேலைசெய்ய வேண்டுமா? ஒரு ரசிகையாக எனக்கும் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாதது குறித்து வருத்தம் உள்ளது. ஆனால் விதிமுறைகள் எப்பொழுதும் மாறாது. இது அனைத்து படங்களுக்கும் பொருந்தும். குறைக்கூறுவதற்கு முன் யோசியுங்கள். " என தெரிவித்தார். 

தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு நாளை விஜய் ஆஜராவது குறித்த கேள்விக்கு, 

கரூர் பிரச்சனை எழுந்தபோது முதலில் சிபிஐ விசாரணை கோரியது யார்? நாங்கள் கேட்டோமா? முதலில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டது விஜய்தான். அவர்மீது தவறு இல்லை இல்லையா? முழுக்க முழுக்க திமுகவைதானே குறைக்கூறினார். அவர் கேட்டார்; விசாரணை நடக்கிறது; அவர் ஆஜராகிவிட்டு வருவார். என தெரிவித்தார். 

Full View


Tags:    

Similar News