தமிழ்நாடு செய்திகள்

டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து இ.பி.எஸ். முடிவு செய்வார் - ஜெயக்குமார்

Published On 2025-12-24 11:44 IST   |   Update On 2025-12-24 11:44:00 IST
  • அ.தி.மு.க. என்பது பூமாலை அல்ல, கோபுரம். அதில் இருந்து உதிர்ந்த செங்கல் வைத்திலிங்கம்.
  • 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லை என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சென்னை மெரினாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விரைவில் பதில் அளிப்பார்.

* டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

* அ.தி.மு.க. என்பது பூமாலை அல்ல, கோபுரம். அதில் இருந்து உதிர்ந்த செங்கல் வைத்திலிங்கம்.

* 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

* 100 நாள் வேலை திட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் தொடர்ந்தால் மக்களுக்கு நல்லதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News