தமிழ்நாடு செய்திகள்
null

பட்ஜெட்ல மத்திய அரசு நமக்கு கொடுத்தது 0, நாமும் தேர்தல்ல அதையே தரணும் - மு.க.ஸ்டாலின்

Published On 2026-02-07 19:50 IST   |   Update On 2026-02-07 21:46:00 IST
  • இப்போது மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் ஆபத்து உள்ளது
  • திமுகதான் 7வது முறையும் ஆட்சி அமைக்கபோகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் தென் மண்டலக் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் பேசியமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது 40க்கு 40' என்று விருதுநகர் மாநாட்டில் தான் நான் சொன்னேன். அதை நடத்திக் காட்டினோம். இப்போது 2026. இந்தத் தேர்தலில் புதிய சாதனை படைக்க நீங்கள் தயாரா? வெல்வோம் 200! இந்த வெற்றிக்கு உழைக்க நீங்கள் தயாரா? நான் ரெடி... நீங்க ரெடியா?

தி.மு.க. என்றால் பிரம்மாண்டம்; இளைஞரணி என்றால் பிரம்மாண்டம். உதயநிதி என்றால் அதைவிடப் பிரம்மாண்டம் என்றுதான் மற்றவர்கள் பார்வைக்கு இந்தக் கூட்டம் தெரியும்.

நமது தாய்மொழியான தமிழுக்கு பல்வேறு காலகட்டங்களில் ஆபத்து வந்தபோதெல்லாம், கடுமையாகப் போராடித் தடுத்த இயக்கம் தி.மு.க.

இப்போது மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் ஆபத்து, இன்றைக்கும் நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகத்தான் இருக்கிறது.

பெண்களின் உழைப்பிற்கு மகளிர் உரிமைத்தொகை, அவர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்யக் கட்டணமில்லா விடியல் பயணம், பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் தோழி விடுதி, பெண்கள் படிக்கப் புதுமைப்பெண் திட்டம் என நீங்கள் கெத்தாகச் சொல்வதற்கு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை இந்தத் திராவிட மாடல் அரசு செய்துள்ளது.

தேர்தலை மனதில் வைத்தாவது ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்குத் திட்டங்கள் ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், வழக்கம்போல் ஈரத்துண்டுதான் கிடைத்துள்ளது. பட்ஜெட்ல ஒன்றிய அரசு நமக்கு கொடுத்தது 0. நாமும் தேர்தல்ல அதையேதான திருப்பிக் தரணும்?

திமுகதான் 7வது முறையும் ஆட்சி அமைக்கபோகிறது. நம் எதிரிகள் யாருக்கும் இந்த சந்தேகம் கிடையாத. மாநிலங்களை முனிசிபாலிட்டி ஆக்கவும், மாநிலக் கட்சிகளை ஒழிக்கவும் பாஜக முயற்சிக்கிறது. ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News