பனையூர் தொகுதி இல்லைனு தெரியல... தவெகவில் இருப்பது சின்ன பிள்ளைகள் - சீமான்
- த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
- தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு காலியானதால் தொண்டர்களை நாளைக்கு வரும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பனையூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்று பலர் விருப்பமனு கொடுத்தது பற்றி கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சீமான், "தவெகவில் இருப்பது சின்ன பிள்ளைகள். பனையூர் தொகுதி இல்லைனு அவங்களுக்கு தெரியல. விற்பனை பண்டம் போல நினைத்து விருப்ப மனு வாங்கியுள்ளார்