டி.டி.வி. கூட்டணிக்கு வருவாரா?... செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? - இ.பி.எஸ். விளக்கம்
- முகமூடி அணிந்து சென்றார் என என்னை பற்றி டி.டி.வி. விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.
- ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன்.
ஓமலூர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அ.தி.மு.க. உள் விவகாரத்தில் தலையிட மாட்டேம் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
* அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடவில்லை.
* என்னுடைய எழுச்சி பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார்.
* கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அ.தி.மு.க.வில் வழக்கம்.
* முகமூடி அணிந்து சென்றார் என என்னை பற்றி டி.டி.வி. விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.
* ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன்.
* ஜெயலலிதா இருக்கும் வரை சென்னைக்கு வராதவர் டி.டி.வி. தினகரன்.
* அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க 18 பேரை அழைத்து சென்றவர் டி.டி.வி. தினகரன்.
* பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி வெளியேற்றப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம்.
* அமித்ஷாவை சந்திக்க யாருடன் சென்றேன் என்பதை கேட்க கூடாது.
* கார் இல்லாததால் தான் கிடைத்த காரில் ஏறி சென்றேன்.
* அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பானது தான்.
* டி.டி.வி.தினகரன் கூட்டணியில் இணைவது என்பது உட்கட்சி விவகாரம்.
* செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வெளியே சொல்ல முடியாது என்றார்.