தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் கடும் பனிமூட்டம் - விமான சேவைகள் பாதிப்பு

Published On 2026-02-08 10:20 IST   |   Update On 2026-02-08 10:20:00 IST
  • மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் உள்ளிட்ட 5 வருகை விமானங்கள் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
  • திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

தமிழகத்தில் இன்று முதல் வரும் 11-ந்தேதி வரை நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் உள்ளிட்ட 5 வருகை விமானங்கள் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து செல்லும் சுமார் 10 விமானங்களின் புறப்பாடும் தாமதம் ஆகி உள்ளதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

அதேபோல, திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

Tags:    

Similar News