தமிழ்நாடு செய்திகள்

நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியவில்லை என்பதை மறுக்கவில்லை - மு.க.ஸ்டாலின்

Published On 2025-09-14 13:51 IST   |   Update On 2025-09-14 13:51:00 IST
  • எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கையெழுத்தான முதலீடுகளில் பாதி அளவு கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை.
  • தெற்காசிய அளவில் தமிழ்நாட்டை நிச்சயம் முன்னணி மாநிலமாக மாற்றி காட்டுவேன்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டை விட்டு அண்டை மாநிலங்களுக்கு முதலீட்டாளர்கள் ஓடினர்.

* எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கையெழுத்தான முதலீடுகளில் பாதி அளவு கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை.

* நமது அரசன் சாதனைகள் பற்றி வடமாநில Youtube சேனல்களில் பேசுகின்றனர்.

* தெற்காசிய அளவில் தமிழ்நாட்டை நிச்சயம் முன்னணி மாநிலமாக மாற்றி காட்டுவேன்.

* நீட் விலக்கு வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் அதில் விலக்கு பெற முயற்சிக்காமல் இல்லை.

* நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியவில்லை என்பதை மறுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான நீதி தரும் ஆட்சியில் மத்தியில் அமையும்

* மத்தியில் ஒருநாள் தமிழ்நாட்டுக்கான நீதியை தரும் ஆட்சி அமையத்தான் போகிறது.

* அடுத்து வருவதும் நமது திராவிட மாடல் ஆட்சிதான் என்றார். 

Tags:    

Similar News