தமிழ்நாடு செய்திகள்
NDA கூட்டணியில் இருப்போர் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை - எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.
- India Today கருத்தரங்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்துகொண்டார்.
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. சட்டமன்ற தேர்தலை வென்றால் NDA கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் நடக்கும் India Today கருத்தரங்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்துகொண்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்னையே இல்லை. கூட்டணியில் இருப்போரும் அவ்வாறு கேட்கவில்லை" என்று தெரிவித்தார்.