தமிழ்நாடு செய்திகள்

நீட் வழக்கிலும் தி.மு.க.வின் போராட்டம் தொடரும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-04-10 12:50 IST   |   Update On 2025-04-10 12:50:00 IST
  • கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒரு தொடக்கம்தான்.
  • அ.தி.மு.க.வும் கூட்டத்தை புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாத்தை காட்டினர்.

சென்னை:

'மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி' என்ற தலைப்பில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

* இந்தியாவின் ஜனநாயகம், கூட்டாட்சி தன்மையை பாதுகாத்திடும் பேரியக்கமாக தி.மு.க.வின் போராட்டம் தொடரும். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் தி.மு.க.வின் போராட்டம் தொடரும்.

* மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி தி.மு.க.

* கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒரு தொடக்கம்தான்.

* தமிழ்நாட்டின் தனித்தன்மையை சட்டப்போராட்டத்தின் வழியே முன்னெடுக்க ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.

* தி.மு.க. அதன் தலைமையிலான அரசின் சட்டப்போராட்டத்தால் பெறும் தீர்ப்புகள் ஜனநாயகத்திற்கு வெளிச்சம் பாய்ச்ச கூடியவை.

* பா.ஜ.க.வினர் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும் அ.தி.மு.க.வும் கூட்டத்தை புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாத்தை காட்டினர் என கூறியுள்ளார். 

Tags:    

Similar News