தமிழ்நாடு செய்திகள்

முத்தமிழ்ப் பேரவை சார்பில் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published On 2025-12-15 20:55 IST   |   Update On 2025-12-15 20:55:00 IST
  • முத்தமிழ்ப் பேரவையின் 51வது ஆண்டு இசைவிழா மற்றும் விருது வழங்கும் வி
  • நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில்,  முத்தமிழ்ப் பேரவையின் 51வது ஆண்டு இசைவிழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார். 

அதன்படி, நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. நாதஸ்வர கலைஞர் வடுவூர் எஸ்.என்.ஆர். கிருஷ்ணமூர்த்திக்கு ராஜரத்னா விருது வழங்கப்பட்டது. நகைச்சுவை தென்றல் என்ற பட்டம் பெற்ற, திருவாரூர் புலவர் சண்முக வடிவேலனுக்கு இயல் செல்வம் விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி வெங்கடராமனுக்கு இசை செல்வம் விருது அளிக்கப்பட்டது.


விருது வழங்கியதற்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம்

நடனக் கலைஞர் அனிதா குகாவின் நாட்டிய சேவையை பாராட்டி, அவருக்கு நாட்டிய செல்வம் விருது வழங்கப்பட்டது. மெய்நானம் சகோதரர்கள் டிகேஆர் ஐயப்பன், டிகேஆர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு நாதஸ்வர செல்வம் விருது வழங்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தவில் உதவி பேராசிரியராக உள்ள நாகூர் செல்வகணபதிக்கு தவில் செல்வம் விருது வழங்கப்பட்டது. மிருதங்க கலைஞர் தஞ்சை கே. முருகபூபதிக்கு மிருதங்கச் செல்வன் விருது வழங்கப்பட்டது.

Tags:    

Similar News