தமிழ்நாடு செய்திகள்
குளித்தலை அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை
- கோவில் திருவிழாவின் போது போதையில் நடனம் ஆடியவர்களை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் திருவிழாவின் போது போதையில் நடனம் ஆடியவர்களை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. அதில் ஷியாம் சுந்தர் என்ற 17வயதான 12-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தடுக்க சென்ற அஜய், வசந்தகுமார் ஆகியோரும் கத்தியால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.