தமிழ்நாடு
போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது- எடப்பாடி பழனிசாமி
- போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கமான அறிக்கையை கவர்னரிடம் அளித்துள்ளோம்.
- போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவர்னரிடம் வலியுறுத்தினோம்.
கிண்டி:
கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அவருடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
கவர்னரை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
* போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. இதே நிலைமை தொடர்ந்தால் தமிழகம் சீரழிந்துவிடும்.
* போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கமான அறிக்கையை கவர்னரிடம் அளித்துள்ளோம்.
* போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவர்னரிடம் வலியுறுத்தினோம்.
* போதைப்பொருள் புழக்கத்திற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றார்.