தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் காற்றின் தரத்தை அறிய டிஜிட்டல் பலகைகள்!

Published On 2026-01-18 14:45 IST   |   Update On 2026-01-18 14:45:00 IST
  • இந்தத் திட்டம் சுமார் ரூ.6.36 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
  • சென்னையின் 15 மண்டலங்களிலும் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்தப் பலகைகள் நிறுவப்பட உள்ளன.

சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் ரூ.6.36 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக, மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை நுழைவு வாயிலில் ஒரு டிஜிட்டல் பலகை சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மற்ற 100 இடங்களிலும் இந்தப் பலகைகளைப் பொருத்தும் பணிகள் 2026 பிப்ரவரி இறுதிக்குள் நிறைவடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்தப் பலகைகள் நிறுவப்பட உள்ளன. இதில் காற்றின் தரம், பி.எம் 2.5, பி.எம் 10, நச்சு வாயுக்களின் அளவு, காற்றின் வேகம், வெப்பநிலை மற்றும் மழை அளவு உள்ளிட்ட 19 வகையான தரவுகள் காட்சிப்படுத்தப்படும்.

இந்தத் திட்டம் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் இயக்கப்படுகிறது. அதாவது, இந்தத் திரைகள் தினமும் 15 மணிநேரம் செயல்படும். இதில் இரண்டு மணிநேரம் அரசு அறிவிப்புகள் மற்றும் காற்றின் தர விவரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள 13 மணிநேரம் வருவாயை ஈட்டுவதற்காக வணிக ரீதியான விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படும். 

Tags:    

Similar News