தமிழ்நாடு செய்திகள்

தக்கலையில் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்கு

Published On 2026-03-04 15:52 IST   |   Update On 2026-03-04 15:52:00 IST
  • வாகனங்களை நிறுத்தி கொடிக்கம்பம் நட்டதோடு தகர கொட்டகையும் அங்கு அமைத்து இருந்தனர்.
  • சாலையில் வாகனங்களை நிறுத்தியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தக்கலை:

குமரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்த போலீசார் அனுமதி பெற வேண்டும். இந்த நிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன்றோ கவின் தலைமையில் போலீசார் பரைக்கோடு பகுதியில் ரோந்து சென்ற போது, சாலையோரம் அனுமதி பெறாமல் கூட்டம் நடப்பது தெரியவந்தது.

பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி கொடிக்கம்பம் நட்டதோடு தகர கொட்டகையும் அங்கு அமைத்து இருந்தனர். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இவற்றை செய்திருந்ததாக தமிழக வெற்றிக் கழக மத்திய மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார், வக்கீல் அணி ஒருங்கிணைப்பாளர் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் சாலையில் வாகனங்களை நிறுத்தியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News