தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு வெள்ளோட்டில் இன்று காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

Published On 2026-01-18 14:13 IST   |   Update On 2026-01-18 14:13:00 IST
  • சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு ராசா கோவில் அருகே 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.
  • பெரும்பாலும் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் பயிரிடப்பட்டுள்ளது.

ஈரோடு:

நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் தனது சொந்த செலவில் ஈரோடு மாவட்டத்தில் 1270 ஆம் ஆண்டு காளிங்கராயன் கால்வாயை வெட்டத் தொடங்கினார். சுமார் 12 ஆண்டுகள் கழித்து கால்வாய் வெட்டும் பணி நிறைவடைந்தது.

ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயர் பாளையத்தில் தொடங்கிய பணி ஈரோடு வழியாக கொடுமுடி நொய்யல் ஆற்றில் முடிவடைந்தது. மொத்தம் 90 கிலோ மீட்டர் தொலைவில் காலிங்கராயன் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது.

காலிங்கராயர் கால்வாய் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பகுதியில் பெரும்பாலும் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் பயிரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலிங்கராயருக்கு ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு ராசா கோவில் அருகே 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கந்தசாமி, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், சந்திரகுமார் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காலிங்கராயர் சிலையின் கீழ் பகுதியில் காலிங்கராயர் வரலாறு குறித்த நூல்கள் மற்றும் போட்டி தேர்வில் பங்கு பெறுபவர்கள் பயன்படுத்தும் நூல்கள் அடங்கிய நூலகம் காளிங்கராயர் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News