திமுக உடன் விரைவில் தொகுதி பங்கீடு: செல்வப்பெருந்தகை
- திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.
- வெகு விரைவில் சுமுகமாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தொகுதி பங்கீடு இறுதியாகும்.
* தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை பேசிக்கொண்டிருக்கிறது. தொகுதி பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
* தொகுதி பங்கீட்டில் வேறுபாடு இருந்தாலும் அனைவரும் இந்தியா கூட்டணியில் தான் இருப்போம்.
* வெகு விரைவில் சுமுகமாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். 40 தொகுதியையும் எங்களுடையதாக கருதி, தேர்தல் பணியாற்றுவோம் என்று கூறினார்.