தமிழ்நாடு செய்திகள்

திமுக உடன் விரைவில் தொகுதி பங்கீடு: செல்வப்பெருந்தகை

Published On 2024-03-02 12:34 IST   |   Update On 2024-03-02 12:34:00 IST
  • திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.
  • வெகு விரைவில் சுமுகமாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தொகுதி பங்கீடு இறுதியாகும்.

* தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை பேசிக்கொண்டிருக்கிறது. தொகுதி பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

* தொகுதி பங்கீட்டில் வேறுபாடு இருந்தாலும் அனைவரும் இந்தியா கூட்டணியில் தான் இருப்போம்.

* வெகு விரைவில் சுமுகமாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். 40 தொகுதியையும் எங்களுடையதாக கருதி, தேர்தல் பணியாற்றுவோம் என்று கூறினார்.

Tags:    

Similar News