தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை

Published On 2026-01-21 13:49 IST   |   Update On 2026-01-21 13:49:00 IST
  • அன்புமணி தலைமையில் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
  • நாளை மறுநாள் நடக்கும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது பேச வேண்டியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

சென்னை:

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பணி மற்றும் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று ஆலோசித்தது. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தலைமையில் இந்த கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் சேர்ந்துள்ளதை அடுத்து செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து பொதுச் செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் சத்தியபாமா மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். நாளை மறுநாள் நடக்கும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது பேச வேண்டியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News