தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: ம.தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைப்பு

Published On 2024-01-20 09:52 IST   |   Update On 2024-01-20 14:50:00 IST
  • ம.தி.மு.க. அவைத்தலைவர்-ஆடிட்டர் அர்ஜூனராஜ்.
  • ம.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ம.தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

1. ம.தி.மு.க. அவைத்தலைவர்-ஆடிட்டர் அர்ஜூனராஜ்.

2. பொருளாளர்-மு.செந்திலதிபன்.

3. அரசியல் ஆய்வு மைய செயலாளர்-ஆவடி இரா.அந்திரிதாஸ்.

4. தேர்தல் பணிச் செயலாளர்-வி.சேஷன்.

இதே போல ம.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

1. ம.தி.முக. துணைப் பொதுச்செயலாளர்-தி.மு.இராசேந்திரன்.

2. கொள்கை விளக்க அணி செயலாளர்-ஆ.வந்தியத்தேவன்.

3. தணிக்கைக் குழு உறுப்பினர்-வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன்.

4. இளைஞரணி செயலாளர்-ப.த.ஆசைத்தம்பி.

இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.

Tags:    

Similar News