தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் தொடங்கினார்- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை

Published On 2023-12-26 07:22 GMT   |   Update On 2023-12-26 07:22 GMT
  • நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அவர் அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
  • ஜனவரி 24-ந் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கோவை:

அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

அந்த வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், இன்று முதல் அடுத்த மாதம் 24-ந் தேதி வரை ஒரு மாதம் காலம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி தனது ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை கொங்குமண்டலமான கோவை மாவட்டம் சூலூரில் தொடங்கினார்.

சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை களை வழங்கி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

கோவையில் ஆலோசனை கூட்டம் முடிந்ததும், இன்று மாலை நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அவர் அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

அதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை திருப்பூர் மாவட்டத்திலும், மாலையில் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து அவர் ஜனவரி 24-ந் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறியதாவது:-

மக்களவை தேர்தலுக்கான பூத்கமிட்டி அமைக்கும் பணியை இன்று கோவையில் தொடங்கியுள்ளோம். அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த மாதம் வரை இந்த பணிகள் நடக்க உள்ளது.மேலும் கோவையில் ஒரு மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

அ.தி.மு.க ஒருங்கிணை ப்பாளராகத் தான் இன்னும் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பெயர் உள்ளது. மக்களவை தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News