தமிழ்நாடு செய்திகள்

கனிமொழி பா.ஜ.க.வில் இணைந்தால்... அண்ணாமலை கூறிய அதிர்ச்சி தகவல்

Published On 2024-06-05 20:46 IST   |   Update On 2024-06-05 20:46:00 IST
  • தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, இங்கே தாமரை மலராது.
  • தகுதி இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. மீண்டும் வாகை சூடினார்.

பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து, கலைஞரின் நினைவிடத்தில் சான்றிதழை வைத்து கனிமொழி இன்று அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி, "தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, இங்கே தாமரை மலராது என்பதை மிகத் தெளிவாக தமிழக மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

அண்ணாமலை அடிக்கடி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்பார் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று, 2-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக நான் அதற்கு பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல.

அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை தந்து கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து கனிமொழியின் பேச்சு குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "என் தந்தை முதலமைச்சரோ, எல்.எல்.ஏ.வோ கிடையாது. குப்புசாமி ஆடு மாடு மேய்த்தார். என்னிடம் பொறுமையாக செல் எனக் கூறியுள்ளார். ஒருவேளை கனிமொழி பா.ஜ.கவில் இணைந்தால் நான் பதவி விலகுவதை குறித்து பரிசீலனை செய்கிறேன்" என்று பதில் அளித்தார்.

Tags:    

Similar News