செய்திகள்

ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக புகார்- மன்சூர் அலிகான் மனு தள்ளுபடி

Published On 2018-09-11 09:45 GMT   |   Update On 2018-09-11 09:45 GMT
எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #MansoorAlikhan
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் பல நடக்கின்றன. இதை என்னால் நிரூபிக்க முடியும்.

எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை தொடர்ச்சியாக 7 நாட்கள் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த துறையில் நிபுணர்களாக உள்ளவர்களை கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சோதனை செய்து, ஓட்டு எந்திரம் மூலம் தேர்தல் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிப்பேன் என்று இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஜூலை 10-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து, ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதை நான் நிரூபிக்கும் விதமாக 7 நாட்கள், அந்த எந்திரத்தை என்னிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் இல்லாமல், மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி வாதிட்டார். இவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.  #MansoorAlikhan
Tags:    

Similar News