தமிழ்நாடு செய்திகள்

கடந்த முறை பொங்கல் கொண்டாடிய போது ஏன் ரூ.3000 கொடுக்கவில்லை?- சீமான் கேள்வி

Published On 2026-01-07 11:46 IST   |   Update On 2026-01-07 11:46:00 IST
  • மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கமான வேடிக்கை தான்.
  • அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

ஈரோடு:

கடந்த ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணைக்காக சீமான் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இவ்வழக்கு தொடர்பாக மார்ச் மாதம் 9-ந்தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்பின், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சீமான், அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் மேலும் கூறியதாவது:-

* திமுக- அதிமுக மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து கொடுந்துயரம்.

* மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கமான வேடிக்கை தான்.

* அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

* கடந்த முறை பொங்கல் கொண்டாடிய போது ஏன் ரூ.3000 கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 

Tags:    

Similar News