செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Published On 2018-08-15 21:45 GMT   |   Update On 2018-08-15 21:45 GMT
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #HeavyRain #SchoolCollege #Holiday
கூடலூர்:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி சாலை, கேரள மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது. தேன் வயலில் உள்ள வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆதிவாசி கிராமத்தில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர் மழையால் அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, அப்பர் பவானி, முக்குருத்தி, பைக்காரா, கிளண்மார்கன் அணைகள் நிரம்பி திறக்கப்பட்டன. இதனால் மாயார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தெங்குமரஹாடா பகுதி மக்கள் ஆற்றை கடந்து பவானிசாகர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அளித்துள்ளார்.   #HeavyRain #SchoolCollege #Holiday
Tags:    

Similar News