தமிழ்நாடு செய்திகள்

வங்கிகள் 4 நாட்கள் செயல்படாது: பணம்- காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கும்

Published On 2026-01-13 10:30 IST   |   Update On 2026-01-13 10:30:00 IST
  • அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் தினமும் நிரப்புவதற்கு வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மின்னணு பணபரிவர்த்தனை இருந்தாலும் ரொக்கமாக செலவிட கையில் பணம் தேவைப்படுகிறது.

சென்னை:

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. மறுநாள் 16-ந்தேதி மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

பொங்கலையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

வங்கிகள் 4 நாட்கள் செயல்படாது என்று அறிவித்துள்ளது. 15-ந்தேதி பொங்கல் முதல் 18-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் வங்கிகளும் செயல்படாது.

வங்கிகள் 4 நாட்கள் மூடப்படுவதால் சேவைகள் கடுமையாக பாதிக்கக்கூடும். பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பல ஆயிரம் கோடி நடைபெறாமல் முடங்கும். நாளை (புதன்கிழமை) மட்டுமே வங்கி செயல்படும் என்பதால் வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் தங்களுடைய வங்கி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர்.

பண்டிகை கால பணத் தேவையை சமாளிக்க ஏ.டி.எம். மையங்களில் முழு கொள்ளளவில் பணம் இருப்பு வைக்கப்பட்டாலும் அது விரைவாக காலியாகி விடுகிறது. எனவே அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் தினமும் நிரப்புவதற்கு வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்னணு பணபரிவர்த்தனை இருந்தாலும் ரொக்கமாக செலவிட கையில் பணம் தேவைப்படுகிறது. எனவே அனைத்து ஏடிஎம்-களும் பணம் இல்லாமல் காலியாக கிடக்காமல் அவற்றை கண்காணித்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணத்தை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிகளும் தொடர்ந்து மூடப்படுவதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படும். அவற்றை சமாளிக்க ஏ.டி.எம்.கள் மூலம் உதவி செய்ய வேண்டும். பணத்தை நிரப்பக்கூடிய தனியார் நிறுவனங்கள் இந்த பணியை முறையாக செய்ய வங்கி மேலாளர்கள் நாளை முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News