டெஸ்டில் இருந்து அந்த 3 பேர் ஓய்வு பெற கம்பீர் தான் காரணம்- முன்னாள் வீரர் குற்றச்சாட்டு
- ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
- அந்த தொடருடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற்றார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருடன் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அந்த தொடருடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற்றார்.
அதனை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சில அதிரடி மாற்றங்கள் அவ்வபோது இந்திய அணியில் நடந்து வருகிறது.
அந்த வகையில் வெளிநாட்டு தொடர்களில் இடம் கிடைக்காத விரக்தியில் அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ரோகித், விராட் ஆகியோர் ஒரே நாளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் மற்றும் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவை நீக்கி விட்டு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இப்படி இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் அரங்கேறி உள்ளது.
இந்நிலையில் சீனியர் வீரர்கர் அவர்களாகவே வெளியேறும் வகையிலான சூழலை கம்பீர் உருவாக்கினார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வுபெற கவுதம் கம்பீரே காரணம் மூத்த வீரர்கள் கம்பீரின் முடிவுகளை எதிர்க்கலாம் என்பதால் அவர்களாகவே வெளியேறும் வகையிலான சூழலை உருவாக்கினார்.
இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.