கிரிக்கெட் (Cricket)

முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆப் செய்த ஆப்கானிஸ்தான்

Published On 2026-01-20 11:28 IST   |   Update On 2026-01-20 11:28:00 IST
  • முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 181 ரன்கள் எடுத்தது.
  • அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த செடிக்குல்லா அடல் 2 ரன்னில் வெளியேறினார். இதனால் 19 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது.

இதனையடுத்து இப்ராஹிம் சத்ரான்- தர்விஷ் ரசூலி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சத்ரான் 87 ரன்களும் ரசூல் 84 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக குவென்டின் சாம்ப்சன் 30 ரன்கள் எடுத்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Tags:    

Similar News