கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி போட்டியில் விளையாடுகிறார் சுப்மன் கில்

Published On 2026-01-19 19:43 IST   |   Update On 2026-01-19 19:43:00 IST
  • பஞ்சாப் அணி சவுராஷ்டிராவை வருகிற 22-ந்தேதி எதிர்கொள்கிறது.
  • இன்று டெல்லி திரும்பிய சுப்மன் கில் ராஜ்கோட்டில் பஞ்சாப் அணியுடன் இணைய இருக்கிறார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று முடிவடைந்தது. இதில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா அணி 1-2 என தொடரை இழந்தது.

நேற்று போட்டி முடிவடைந்த நிலையில், சுப்மன் கில் இன்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து டெல்லி சென்றார்.

இந்த நிலையில் ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணிக்கெதிராக விளையாடுவதற்கான ராஜ்கோட் புறப்பட்டுச் செல்ல இருக்கிறார். வருகிற 22-ந்தேதி ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணி சவுராஷ்டிராவை எதிர்கொள்கிறது. இதில் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார்.

சவுராஷ்டிராவைத் தொடர்ந்து 29-ந்தேதி கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. தற்போது பி பிரிவில் 5 போட்டிகளில் தலா ஒரு வெற்றி தோல்வியடைந்துள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

Tags:    

Similar News