கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். ஸ்பான்சரானது கூகுள் ஜெமினி: ரூ.270 கோடிக்கு பிசிசிஐ உடன் ஒப்பந்தம்

Published On 2026-01-20 21:14 IST   |   Update On 2026-01-20 21:14:00 IST
  • நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் நடைபெறுகிறது.
  • கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் ஆவார்.

புதுடெல்லி:

19-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஸ்பான்சராக சுந்தர் பிச்சையின் கூகுள் ஜெமினி களத்தில் இறங்கியுள்ளது.

உலகளவில் ஏஐ போட்டியில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஜெமினி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஸ்பான்சராக 3 ஆண்டுக்கு ரூ.270 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இது ஐ.பி.எல். வரலாற்றில் AI தளங்களுடன் செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தம் கிரிக்கெட்டில் AI நிறுவனங்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.

ஏற்கனவே, பெண்கள் பிரீமியர் லீக் உடன் சாட் ஜிபிடி ரூ.16 கோடி மதிப்பிலான 2 ஆண்டு விளம்பர ஒப்பந்தம் செய்தது.

கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News