VIDEO: ஒரே அசிங்கமா போச்சு...சாக்ஷி செய்த செயல்: தோனி சிரிப்பலை
- டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின.
- இந்த போட்டியை தோனி, அவரது மனைவி நேரில் கண்டு களித்தனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்த போட்டியின் போது, தோனியின் மனைவி சாக்ஷி செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி போட்டியின் 18-வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் நேராக அவரிடமே அடித்தார். பந்து தரையில் பட்டு பும்ராவிடம் சென்றது. ஆனால், விஐபி கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சாக்ஷி தோனி, அது 'கேட்ச்' என்று தவறாக நினைத்து இருக்கையில் இருந்து குதித்து உற்சாகமாகக் கொண்டாடத் தொடங்கினார்.
சாக்ஷி தவறுதலாகக் கொண்டாடுவதைக் கண்ட எம்.எஸ். தோனி, உடனடியாக அவரை அமைதிப்படுத்தினார். பந்து தரையில் பட்டு வந்ததைச் சைகை மூலம் சுட்டிக்காட்டிய தோனி, சிரித்துக்கொண்டே சாக்ஷியை "உட்காரு" என்று கூறினார்.
தோனியின் இந்த ரியாக்ஷனும், சாக்ஷியின் குழந்தைத்தனமான கொண்டாட்டமும் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.