இந்தியா

VIDEO: சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த பைக் மோதி 27 வயது வங்கி ஊழியர் உயிரிழப்பு

Published On 2026-02-18 10:50 IST   |   Update On 2026-02-18 10:50:00 IST
  • வங்கியின் எதிரே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றார்.
  • அந்த வழியாக அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் அவர் மீது மோதியது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கெம்பேகவுடா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரி (27 டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.

கடந்த திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில், யோகேஸ்வரி வங்கியின் எதிரே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் யோகேஸ்வரி மற்றும் பைக்கை ஓட்டி வந்த தீபக் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, யோகேஸ்வரி அன்று இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார்.

பைக்கை ஓட்டி வந்தவர் உல்சூர் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News