இந்தியா

ஏஐ மாநாட்டில் பொருட்கள் திருட்டு, குளறுபடி - மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் - கண்டித்த கார்கே!

Published On 2026-02-18 10:36 IST   |   Update On 2026-02-18 10:36:00 IST
  • 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
  • இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது.

டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.

5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் குளறுபாடு ஏற்பட்டதால் கண்காட்சியாளர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் உணவு, குடிநீர் இன்றி தவித்தனர்.

பாதுகாப்பு காரணம் காட்டி சில நிறுவனங்கள் அவர்களின் ஏஐ தயாரிப்புகள் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெரும் செலவு செய்து வந்த அவர்கள் விரக்தியுடன் திரும்பினர்.

லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதால் கண்காட்சி நடத்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 24 மணி நேரத்தில் அவை மீட்கப்பட்டன.

இதுபோன்ற மோசமான ஏற்பாட்டிற்காக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

மக்களின் வருகை அதிகமாக இருந்தது. புகார்களை உடனுக்குடன் தீர்க்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் கருத்துகளைக் கொண்டு எஞ்சிய நாட்களில் ஏற்பாடுகள் சீர் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் குளறுபடிகளை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இது அரசின் தவறான நிர்வாகத்தைக் காட்டுகிறது. போதிய திட்டமிடல் இல்லாததால், இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது" என்று தெரிவித்தார்.   

Tags:    

Similar News