இந்தியா

நிதியை முடக்கி கேரளாவின் கழுத்தை நெறிக்கும் மத்திய அரசு.. சத்யாகிரகப் போராட்டம் அறிவித்த பினராயி விஜயன்

Published On 2026-01-09 07:49 IST   |   Update On 2026-01-09 07:50:00 IST
  • 2017 முதல் மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பைக் குறைத்து, நிதி ஆதாரங்களை முடக்கி வருவதாக குறிப்பிட்டார்.
  • இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் அமெரிக்க அதிபருக்கு எதிராக ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கக் கூட மத்திய அரசால் முடியவில்லை.

நிதி ரீதியாக முடக்கி கேரளாவின் கழுத்தை நெரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 12-ம் தேதி திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்கும் மாபெரும் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அரசு கேரளா மீது பொருளாதார முற்றுகையை நடத்தி வருவதாக சாடிய அவர், நிதிப் பங்கீட்டை குறைத்தும், 2017 முதல் மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பைக் குறைத்து, நிதி ஆதாரங்களை முடக்கியும் வருவதாக குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து, ஜனவரி 12 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறும்.இதில் கேரளாவின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் அமெரிக்க அதிபருக்கு எதிராக ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கக் கூட மத்திய அரசால் முடியவில்லை என்று பினராயி விஜயன் விமர்சித்தார்.  மேலும் amerik

Tags:    

Similar News