இந்தியா

மகா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகுவார் என்பது முன்கூட்டியே தெரியும்- கார்கே சொல்கிறார்

Published On 2024-01-28 08:59 GMT   |   Update On 2024-01-28 08:59 GMT
  • பாரதிய ஜனதா கூட்டணியில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் சேர்ந்துள்ளார்.
  • ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்

பீகாரில் லாலு பிரசாத் துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் சேர்ந்துள்ளார்.

இதையடுத்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.

 இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறும்போது, "மகா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி விடுவார் என்பது எங்களுக்கு முன் கூட்டியே தெரியும். தேஜஸ்வி யாதவ் இதனை எங்களிடம் கூறினார்" என்றார்.

Tags:    

Similar News