இந்தியா

திருச்சூர் பூரம்: யானை அட்டகாசம் - கூட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் படுகாயம்

Published On 2025-05-08 10:25 IST   |   Update On 2025-05-08 10:25:00 IST
  • யானைகளில் ஒன்று திடீரென ஆக்கிரோஷமடைந்து ஓட்டமெடுத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
  • யானைப் பாகன்கள் உடனடியாக, யானையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

திருச்சூர் பூரம் திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்ற யானைகளில் ஒன்று திடீரென ஆக்கிரோஷமடைந்து ஓட்டமெடுத்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் படுகாயம் அடைந்தனர்.

யானைப் பாகன்கள் உடனடியாக, யானையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பாண்டி சமூஹா மடம் சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் ஏற்பட்ட இச்சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது

கூட்ட நெரிசலில் சிக்கி காயசமடைந்தவர்கள் மருத்துவமனையில் தெப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News