இந்தியா

பா.ஜ.க. வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்: கார்கே ஆவேசம்

Published On 2024-03-15 10:12 GMT   |   Update On 2024-03-15 10:12 GMT
  • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
  • பா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்கவேண்டும் என கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு:

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் வருமான வரித்துறையினரை வைத்து இப்படி செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் உள்ளது. இப்படி செய்தால் தேர்தல் எப்படி நடக்கும்?

தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. எப்படி பணம் சம்பாதித்தது என்பதை சுப்ரீம் கோர்ட்டு இன்று அம்பலப்படுத்தியுள்ளது.

எங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க. வங்கி கணக்குகள் செயல்பட்டில் உள்ளது.

தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பா.ஜ.க.வின் வங்கி கணக்குகளை முடக்கவேண்டும்.

தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News