இந்தியா
உ.பி மதுராவில் பயங்கர விபத்து: பேருந்து- கார் மோதியதில் 5 பேர் பலி
- மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் காரில் தீ பிடித்தது.
- வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை.
உத்தரப் பிரதசேம் மாநிலம் மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது.
அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து- கார் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்தின் பின்பக்கம் கார் மோதியதில், நிலை தடுமாறிய பேருந்து சென்டர் மீடியனில் மோதியது.
மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் காரில் தீ பிடித்தது.
இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.