search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus-car collision"

    • மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் காரில் தீ பிடித்தது.
    • வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை.

    உத்தரப் பிரதசேம் மாநிலம் மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது.

    அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து- கார் மோதி விபத்துக்குள்ளானது.

    பேருந்தின் பின்பக்கம் கார் மோதியதில், நிலை தடுமாறிய பேருந்து சென்டர் மீடியனில் மோதியது.

    மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் காரில் தீ பிடித்தது.

    இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா பஸ்-கார் நேருக்கு நேர் மோதியது.
    • இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து ராஜபாளையத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 பேர் இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சுற்றுலா பஸ் எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கார் மற்றும் பஸ்சின் முன் பகுதி கடும் சேதமடைந்தன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஜயலட்சுமி (வயது37), மாலதி(45), சுப்புலட்சுமி (35), மகேந்திரன் (21) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை நத்தம்பட்டி போலீசார் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் சுற்றுலா பஸ்சில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பதியினர் படுகாயம்
    • 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூரில் இருந்து நேற்று மாலை சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஜோலார்பேட்டை அடுத்த ராமனூர் அருகே முதலை மடுவு என்ற இடத்தில் சென்ற போது ஆம்பூர் பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த காரும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு ஊராட்சி ஜலகாம்பாறை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பாக்யராஜ் (வயது 40), இவரது மனைவி பரிமளா (வயது 34) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    மேலும் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தின் அருகே பஸ் கவிழாமல் பஸ் டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் பஸ்சில் பயணம் செய்த சுமார் 60 பயணிகள் எந்த வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். மேலும் விபத்தின் போது பயணிகள் கத்தி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் அரசு, காதர் கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த தம்பதியினரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×