உள்ளூர் செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை- சரவணன்

Published On 2024-04-13 03:34 GMT   |   Update On 2024-04-13 03:34 GMT
  • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் மதுரை-நத்தம் சாலை ரூ.ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டது.
  • பாண்டிகோவில் அருகே 50 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது.

மதுரை:

மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலாத்தூர், ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி, வெளிச்சநத்தம், ஆலங்குளம், பாசிங்காபுரம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின் போது வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் மதுரை-நத்தம் சாலை ரூ.ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டது. மக்களின் நிர்வாக வசதிக்கா மதுரை கிழக்கு தொகுதியில் புதிய வட்டம் அமைக்கப்பட்டது. மூன்றுமாவடி முதல் ஆனையூர் வரை ரூ.50 கோடியில் சாலை அமைக்கப்பட்டது.

பாண்டிகோவில் அருகே 50 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் மதுரையில் செயல்படுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மதுரையில் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. கடந்த தேர்தலில் கூறிய வக்குறுதிகளை வெங்கடேசன் நிறைவேற்றவில்லை. எனவே வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரை இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்க்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு என்று பெரியணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னம்பலம், எஸ்.எஸ். சரவணன், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி இணைச் செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், ஒத்தக்கடை கார்த்திகேயன், மாணவரணி உசிலை முத்துகிருஷ்ணன் பாசறை ராமர், மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News