உள்ளூர் செய்திகள்

சிவகிரி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-03 08:55 GMT   |   Update On 2023-03-03 08:55 GMT
  • கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் செயலாளர் வெள்ளைபாண்டியன் தலைமை தாங்கினார்.

சிவகிரி:

சிவகிரி அருகே தேவி பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் செயலாளர் வெள்ளைபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் ரவிந்திரநாத் பாரதி, மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ், நிர்வாகிகள் அமல்ராஜ், போத்தி, பாக்கியம், மாதர் சங்கத் தலைவி பேச்சியம்மாள், சின்னராசு, சூசையம்மாள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News