உள்ளூர் செய்திகள்
- வீட்டில் தனியாக இருந்த முகமது ராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவரது மகன் முகமது ராஜா (18). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விபத்து ஏற்பட்டதில் இருந்து அவருக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த முகமது ராஜா திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முகமது ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.