உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-08-18 09:44 GMT   |   Update On 2022-08-18 09:44 GMT
  • அறையில் பானுமதி தூக்குபோட்டு தொங்கி கெண்டிருந்தார்.
  • சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில் பானுமதி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்தோடு:

ஈரோடு, கொங்கம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பானுமதி (31). இவர்களுககு ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 16-ந் தேதி பானுமதி தனது தாய் பிரேமாவுக்கு போன் செய்து மகன் ரோகித்தை கூட்டி வரும் பொது சேமியா வாங்கி வர சொல்லி உள்ளதாக தெரிகிறது. பானுமதி மகன் ரோகித்துடன் அவரது தாய் சேமியா வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் பானுமதி மகள் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அம்மா எங்கே என் கேட்ட போது அம்மா வீட்டின் அறையை சாத்திக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அறையை தட்டிப் பார்த்த போது அறை தாழிட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

அப்போது அறையில் பானுமதி தூக்குபோட்டு தொங்கி கெண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பானுமதியின் தாய் பிரேமா கூச்சலிட்டார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பானுமதியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தாய் பிரேமா சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில் பானுமதி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News