உள்ளூர் செய்திகள்

சேலம் எருமாபாளையத்தில் இன்று விபத்து வாலிபர் உடல் நசுங்கி பலி

Published On 2022-08-11 05:59 GMT   |   Update On 2022-08-11 05:59 GMT
  • சீலநாயக்கன்பட்டியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் எருமா பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது ஏறி இறங்கி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

சேலம்:

விழுப்புரம் மாவட்டம் எனத்திமங்கலம் ஓந்தவாடி தெருவை சேர்ந்ததவர் நாராயணன். இவரது மகன் கோவிந்தசாமி (வயது 32), இவர் இன்று காலை சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் எருமா பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில சென்று கொண்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது ஏறி இறங்கி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்து விட்டார். தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதறிய படி சேலத்திற்கு விரைந்துள்ளனர். 

Tags:    

Similar News