செய்திகள்

வேதாரண்யம் அருகே 2 வாலிபர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-10-31 10:57 GMT   |   Update On 2018-10-31 10:57 GMT
வேதாரண்யம் அருகே 2 வாலிபர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட தகத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் செந்தில் (வயது 28). இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். செந்தில் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த செந்தில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த செந்திலுக்கு சூர்யா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

வாய்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட தாணிகோட்டம் சின்னதேவன் தெரு பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 34). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த நிலையில் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையில் இருந்து கல்யாணசுந்தரம் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப் பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News