கிரிக்கெட் (Cricket)

14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்த அபிஷேக் சர்மா

Published On 2026-01-25 21:32 IST   |   Update On 2026-01-25 21:32:00 IST
  • 3வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
  • பிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 21-ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 23-ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. சரவெடியாய் வெடித்த அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News